Monday, February 23, 2009

காதல் சதுக்கம்

வந்து உட்கார்ந்து கால் மணி நேரம் ஆகியும் ஜெர்ரி எட்சனுக்குப் படபடப்பு அடங்கவில்லை. நெஞ்சுக்குள்ளே ஓடும் ரயிலின் தடக் தடக் குறையவில்லை. 'எழுந்து போய்விடலாமா' என்றுகூட நினைத்தான். அப்பாவின் கேலியான சவாலும், அம்மாவின் பாசமான கண்டிப்பும் நினைவுக்கு வந்தன.

"ஏண்டா உனக்கு இருபத்திரெண்டு வயசு ஆச்சு, ஞாபகமிருக்கா இல்லையா? ஆபீஸ்ல இருந்து வர்றே. புஸ்தகமும் கையுமா ரூமுக்குள்ளே போய் உட்கார்ந்துடறே. இல்லைன்னா கம்ப்யூட்டர், இன்டர்நெட். இதுவரைக்கும் ஒரு பொண்ணு கூடவாவது அவுட்டிங் கிவுட்டிங்னு எங்கேயாவது போயிருக்கியா?" அம்மாவின் குரல் ரொம்பவே தழுதழுத்துவிட்டது.

அப்பா ஒருபடி மேலே போய், "கொஞ்சம்கூட சோஷல் மூவ்மென்ட்டே இல்லாம எப்படித்தான் படிப்பும் முடிச்சுட்டு வேலையும் வாங்கினானோ..." என்று கேட்டேவிட்டார். விட்டால் இவனை டிஸ்மிஸ் செய்யச்சொல்லி ஆபீஸுக்கே லெட்டர் போட்டுவிடுவார் போலிருக்கிறது.

இவனுக்கு மட்டும் பிறரைப் போல் நார்மலாக இருக்க ஆசையில்லையா என்ன? சுபாவம் என்று ஒன்று இருக்கிறதே... அழகு குறைந்த பெண் என்றால் அலட்சியம் வந்துவிடுகிறது. ரொம்ப அழகான் பெண்ணைப் பார்த்தாலோ காதலுக்கு பதில் பயம்தான் வருகிறது. காம்ப்ளெக்ஸ்! இது அப்பா, அம்மாவுக்குப் புரிந்தால்தானே...

"நான் என்ன செய்யணும்னு எதிர்பார்க்கறீங்க?"

"உன்னைச் சுத்தி நடக்கற விஷயங்களைப் பாரு. உன் வயசுப் பசங்களும் பொண்ணுங்களும் ரெஃப்ரெஷ் பண்ணிக்கறதுக்குன்னே காதலை உபயோகிக்கறது தெரியும். லவ், டேட்டிங் எல்லாம் எவ்வளவு பெரிய விஷயம்ங்கிறது புரியும்" என்றபடி அப்பாவைப் பார்த்துக் கண்ணடித்தாள் அம்மா.

இவன் வெட்கப்பட்டு முடிப்பதற்குள், "லவர்ஸ் ஸ்கொயருக்குப் போ. எத்தனை விதமான ஜோடிகள் வர்றாங்க, லவ்லயே எத்தனை வகை இருக்குன்னு எல்லாம் தெரிஞ்சுப்பே. உனக்கே புத்தி வர சான்ஸ் இருக்கு. போ... போயிட்டு ராத்திரி வந்து என்கிட்டே சொல்லு. இந்தா" என்று கார் சாவியைக் கையில் திணித்தார் அப்பா.

இதோ வந்தாச்சு. பார்த்தாச்சு, இந்தக் கண்கொள்ளாக் கண்காட்சியை. 'ஊரின் இளைஞர் ஜனத்தொகை இத்தனையா!' என்று அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

காதல் சதுக்கத்தில் எல்லா பெஞ்சுகளும் இரண்டு பேர் மாத்திரமே உட்காரும்படி டிசைன் செய்யப்பட்டிருந்ததை கவனித்தான். ஒவ்வொரு பெஞ்சிலும் ஒரு ஜோடி. உயரமான ஆள், குட்டைப் பெண்... பருமனான அம்மணி, ஒட்டடைக் குச்சி ஜென்டில்மேன். நடுத்தர வயது ஆபீஸர் தோற்றத்தில் ஒருவன், கூடவே கான்வென்ட் பெண் போன்ற ஆன்ட்டி... வெவ்வேறு தரங்களில், வெவ்வேறு நிறங்களில் மனிதர்கள். காதலர்கள். ஒரே ஒற்றுமை எல்லோருடைய முகங்களிலும் சந்தோஷம், சந்தோஷம், சந்தோஷம்!

சிரித்தபடி, சீரியஸாக, சத்தம் போட்டபடி, முத்தம் கொடுத்தபடி, தோளில் கை போட்டு அணைத்துக்கொண்டு, மடி மீது தலைவைத்து, மார்பில் அடைக்கலம் தேடி... உக்கிரமாகக் காத்லிக்கும் ஜோடிகள்.

தனியாகவும் ஓரிருவர் உட்கார்ந்திருந்தார்கள். 'காத்திருந்தார்கள்' என்று சொல்வதுதான் பொருத்தம். ஒன்று, காதலி வருவாள்... அல்லது இதுவரை எங்கேஜ் ஆகாதவன் என்றால் புதிய நட்பு கிடைக்கும் மனித உயிர்களிடையே புதிய உறவுகளை உருவாக்குவதற்கும். ஏற்கெனவே இருக்கும் உறவுகளைச் செழுமைப்படுத்துவதற்கும் வீனஸ் தேவதையின் நிதி உதவியோடு கட்டப்பட்டிருக்கும் ஏரியா ‍ காதல் சதுக்கம்...

'தான் எதற்கு இங்கே வழி தப்பிய ஆடாக... திருவிழாவில் தொலைந்த குழந்தையாக...' என்று ஓரளவு படபடப்பு அடங்கி, யோசித்துக்கொண்டிருந்தபோது, நம்ப முடியாத அந்தக் காட்சியைப் பார்த்தான்.

ஐம்பதடி தூரத்தில் இரண்டு யுவதிகள் இவனைக் காட்டி என்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருத்தி, 'மாட்டேன். என்னை விட்டுவிடு' என்பதற்கான உடலசைவை வெளிப்படுத்தினாள். வயதில் மூத்தவளாகத் தெரிந்த மற்றவள், ஏதோ சொல்லி தைரியப்படுத்துவதும் புரிந்தது.

இவனுக்கு மறுபடி நெஞ்சு தடதடக்க ஆரம்பித்தது. 'நம்மைக் காட்டிக் காட்டி என்ன பேச்சு? ஒருவேளை அந்தச் சின்னவள் என்னால் கவரப்பட்டு... சே... நான் என்ன முதல் பார்வையிலேயே கவருமளவு கம்பீரமாகவா இருக்கிறேன்...'

இதற்குள் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவர்கள் போல் இரு யுவதிகளும் ஜெர்ரியை நெருங்கினார்கள். 'என்ன அந்தஸ்தான தோற்றம்... கடவுளே என் வாழ்க்கையில் ஏதாவது அற்புதம் நடக்கப் போகிறதா?' அவசர அவசரமாகக் கைக்குட்டையை எடுத்து நெற்றியின் வியர்வைப் புள்ளிகளை அழுந்தத் துடைத்ததில் எரிந்தது நெற்றி. நெஞ்சுக்குள் ரயிலின் தடக்... தடக்... ஸ்டார்ட் ஆனது.

பக்கம் வந்தவர்களில் கூச்ச சுபாவியாகத் தெரிந்த அழகிய பெண் (அட, அதற்குள் 'அழகிய' என்ற அடைமொழி தோன்றிவிட்டதே!) பேச ஆரம்பித்தாள். "வந்து... நீங்க... இந்த காதல் சதுக்கத்தைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?" அவள் குரல் கேட்டதும் பக்கத்து குரோட்டன்ஸில் இருந்து பட்டாம்பூச்சிகள் கிளம்பிப் பறந்தன. அவள் நெற்றியிலும் வியர்வை முத்துகளைப் பார்த்து இவனுக்குக் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.


அதே நேரம், அவள் கேட்ட கேள்வியினால் அவனுடைய நெஞ்சு ரயில் வேகம் பிடிக்கவும் ஆரம்பித்தது. சொஞ்சம் சுதாரித்துக்கொண்டவள் போல அவள் தொடர்ந்து பேசினாள்.

"காதலைப் பற்றி என்ன நினைக்கறீங்க?" நல்லது. இது நல்லூழ்தான். இவன் இந்த இடத்துக்கு வரவேண்டும் என்பதற்காகத்தான் இவனுடைய அதிர்ஷ்ட தேவதை காத்திருந்திருக்கிறாள்!

"காதலை ப்ரபோஸ் பண்ண வேண்டியது ஆணா, பெண்ணா?" அடடே என்ன வாசனை, என்ன வாசனை! பெண்களின் உடலில் இயற்கையிலேயே இவ்வளவு வாசனை இருக்குமா என்ன?

அவளுடைய கேள்விகளுக்கெல்லாம் தான் என்ன பதில் உளறினோம் என்று ஜெர்ரிக்குப் பதிவாகவில்லை. விதவிதமான ஸ்ருதிய்ல் ஏதேதோ ஒலிகளை எழுப்பிய உணர்வுதான் இருந்தது. 'கடவுளே இந்து இந்த இடத்தின் மகினையா, பெற்றோரின் ஆசீர்வாதத்தின் பலனா, அல்லது முற்பிறவியில்...'

கடைசியாக அந்தக் கேள்வியையும் அவள் கேட்டேவிட்டாள்!

"இப்போ என்னை மாதிரி ஒரு பொண்ணு உங்க கிட்டே ஐ லவ் யூ சொன்னா எப்பிடி ரியாக்ட் பண்ணுவீங்க..?"

இவன் தாங்க முடியாதவனாக அவளுடைய கையைப் பற்றிக்கொண்டுவிட்டான். 'ஓ என் கடவுளே ஓ என் கடவுளே' என்கிற வார்த்தைகள் மட்டும்தான் மனதில் வந்தன.

அதுவரையில்...

நண்பர்களே எனக்கு இந்தக் கதையை முடிக்கத் தெரியவில்லை. நீங்கள் முடித்தால் சந்தோஷப்படுவேன்.

மிகவும் எதிர்பார்க்கிறேன். ப்ல்ஸ்!!!

Thursday, February 19, 2009

நண்பர்கள் நண்பர்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்

1) வண்டி ஓட்டணும் ஜாக்கிரதை, ரெண்டு பெக் அடிச்சதுக்கப்பறம் கொஞ்சம் கேப் விடுங்க ‍ – இப்படி நாங்க சொல்ற எந்த வேலையையும் உருப்படியா நீங்க செஞ்சதா சரித்திரம் இல்லை. அது ஏன்?

2) கடையில் போய் சரக்கு வாங்கீட்டு வரச் சொன்னா, அதெப்படி நாங்க முக்கியமா சொல்லிவிட்ட பிராண்டை மாத்தி வாங்கிட்டு வ‌ர்றீங்க?

3) பக்கத்து டேபிள்காரர்களுக்கு சைடு டிஷ் தர்றது, சரக்கு மாஸ்டருக்கு சமையல் டிப்ஸ் தர்றதுன்னு எல்லாமே உடனே ஞாபகம் வெச்சுட்டு நடக்குது. ஆனா சிகரெட் வாங்கிட்டு வர்றது, பத்தவைக்க தீப்பெட்டி ஏற்பாடு பண்றது, சைடு ஆர்டர் பண்றது இதெல்லாம் நாலைஞ்சு தடவை சொல்லி, ரிமைண்டர் வெச்சு அப்புறம்தான் நடக்குது. அது ஏன்?

4) ஃபுல் மப்புல தோணுற தத்துப்பித்துவங்களை ஏகப்பட்ட பேருக்கு என் செல்லுல இருந்து திரும்பத் திரும்பச் சொல்றீங்களே... அது ஏன்?

5) நீங்க தண்ணியடிக்கிறது ஜாலிக்காகன்னு சொல்ல வேண்டியது, அதுவே நாங்க அடிச்சா அட்வைஸ் பண்றது. அதெப்படீங்க?


6) கடை அடைக்கப்போற கடைசி அவர்ல சரக்கு தேவைப்படும்போது உங்க மூஞ்சில இருக்கற டென்ஷன், கான்சண்ட்ரேஷன் – ஒம்போது மணிக்கே போலாம்னு நான் சொல்லும்போது ஏன் இருக்க மாட்டீங்குது?

7) போனைப் போட்டுட்டு எதிர்முனையில கொலைவெறியோட திட்டும்போது செல்லுல மைக்கையும் போட்டுட்டு அதெப்படீங்க ஒரு ரியாக்‌ஷனும் காட்டாம முஞ்சிய வெச்சுக்கறீங்க?

8) அடுத்தவன் தட்டுல இருந்து நான் ஆம்லேட்டை எடுத்துத் திங்கும்போது தலையில அடிச்சுக்கிற நீங்க, என் தட்டை வழிச்சு வழிச்சு நக்குறீங்களே... அது ஏன்ங்க?

9) நான் சரியா வாட்டர் மிக்ஸ் பண்ணும்போதெல்லாம் கொஞ்சம் சரக்கை எச்சாவா ஊத்திக்கிற நீங்க, நான் டைட்டா இருக்கும்போது ராவா ஊத்தினாக்கூட அது ஏன் உங்களுக்கு அவ்ளோ பிடிக்குது?


10) பாருக்குக் கிளம்பும்போது ‘லேட்டாச்சு.. லேட்டாச்சு’ன்னு குதிக்கறீங்களே.. அதே மாதிரி மப்பு ஏறினதுக்கு அப்பறம் அதே அளவு ஸ்டெடியா உங்களால குதிக்க முடியுமா?

Monday, February 16, 2009

எல்லாம் தெரிந்தவன்!

'நந்தினியிடம் இன்றைக்கே ஐ லவ் யூ சொல்லிவிடலாம்' என்று தீர்மானித்துக்கொண்டான் பரத். அவனைப் பற்றி முதன்முதலில் உள்ளூர்ப் பத்திரிகையில் எழுதியவள் நந்தினி. 'உலகின் அதிசய மனிதன்... எதைப்பற்றிக் கேட்டாலும் பதில் சொல்கிறார். உலகின் அதிக டேட்டாபேஸ் உள்ள கம்ப்யூட்டருக்கு இந்தியாவின் மனிதச் சவால்!' என்று எழுதியிருந்தாள்.

உண்மையில் பரத் அதற்கு முழுக்கத் தகுதியானவன். அது எப்படி என்று தெரியவில்லை, பதினைந்தாவது வயதில் 'அந்த'த் திறமை தனக்கு இருப்பதை உணர்ந்தான். யார் எதைக் கேட்டாலும் அதற்கான பதில் இவனுக்கு சந்தேகமில்லாமல் மூளையில் பளிச்சிட்டது. 'தாமிரத்தின் வேதிக்குறியீடு என்ன?' செக்கோஸ்லோவேகியாவில் எத்தனை மாகாணங்கள்? இடைக்காலச் சோழர்களில் தாவர விரும்பியான மன்னன் யார்? பதினொன்றின் வர்க்க மூலம் என்ன?சந்தன வாசனையோடு கூடிய கழிவை வெளியேற்றும் காட்டுப் பன்றி ஆப்பிரிக்காவின் எந்தப் பகுதியில் இருக்கிறது?செஸ்ஸில் கார்ப்போவ் இதுவரை தேசிய லெவலில் எத்தனை முறை வென்றிருக்கிறார்..?'

எதைக் கேட்டாலும் டக் டக் என்று பதில் சொன்னான். 'பரத் ஆராய்ச்சிக்குரிய ஒரு மனிதப் பொக்கிஷம்' என்று ஆங்கிலப்ப் பத்திரிகை ஒன்று தலையங்கம் எழுதியது. சன் டிவியிலிருந்து ஸ்டார் டிவி வரை இவன் பேட்டியை ஆர்வமாய் ஒளிபரப்பின. ஞாபக சக்க்தியை அதிகரிக்கச் செய்யும் ஸிரப் தயாரிக்கும் மருந்து கம்பெனி இவனை விளம்பரத்தில் நடிக்க வைப்பதற்காக இவன் வீட்டுக்கு நடையாய் நடந்தது. அரசியல் கட்சிகள் இவனைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டு ஆதாயம் தேட அலைந்தன.

இது மறுபிறவியா, வேறு ஏதாவதா என்று இவனே ஐந்து வருடங்களாகக் குழம்பிக்கொண்டிருக்க, தற்செயலாகச் சந்தித்த நந்தினி ஒரு பிரபல மனோதத்துவ நிபுணரிடம் இவனை அழைத்துச் சென்றாள். "இந்தத் திறமை எப்படி வந்ததுனு யோசிக்கிறதை மட்டும் நிறுத்திடுங்க. .மத்தபடி குழப்பம் எதுவும் இருக்காது..." என்று சொல்லிவிட்டார் டாக்டர்.

அப்போது இவனைப் பற்றிப் பத்திரிகையில் எழுதியதுடன், நேரம் கிடைக்கும்போதெல்லாம் இவனைச் சந்திக்க வந்துவிடுவாள் நந்தினி. மாலை ஐந்து மணிக்கு வந்தால், ராத்திரி பத்து மணிக்குத்தான் போவாள். இவனைப் பற்றிய செய்தியைப் படித்துவிட்டு கேள்விகள் கேட்க வருகிறவர்களை, ஓகே! நாளைக்கு வாங்க. மணி பத்தாச்சு" என்று விரட்டுவாள்.

'ரொம்ப நல்ல பொண்ணு' என்று இவன் நினைத்துக்கொண்டிருந்த போதே, ''ஹாய் டியர்..." என்றபடி நந்தினி நுழைந்தாள்.
அவளுக்கு ஒரு பரிசு கொடுப்பவன் போன்ற தொனியில், "நந்தினி... நம்ம கல்யாணத்தை எப்ப வெச்சுக்கலாம்..?" என்றான் பரத்.

அவ்வளவுதான் படபடவென்று பொரிந்துவிட்டாள் நந்தினி. அவள் பத்து நிமிடம் படபடத்ததன் சாராம்சம் இதுதான்.
"நான் உன்கூட ஃப்ரெண்ட்லியாகத்தான் பழகினேன். ஒரு பெண்ணின் மனசைப் புரிந்துகொள்ள முடியாத முட்டாள். வடிகட்டின முட்டாள்...

Thursday, February 12, 2009

ஸாரி
நண்பர்களே,
இந்தப் பதிவை
நீக்கிவிட்டேன்.

Friday, February 6, 2009

அஞ்சுக்கு எத்தனை?

வளவளவென்று எழுதும் வழக்கமுள்ள நிருபரை ஆசிரியர் ஒருநாள் கன்னாபின்னா திட்டிவிட்டார். சில நாட்களில் ஒரு காரின் பெட்ரோல் டாங்க் வெடித்து ஐந்து பேர் இறந்து போய்விட்டார்கள். இந்தச் செய்தியை அந்த ரிப்போர்ட்டர் இப்படி ரிப்போர்ட் செய்தார்: 'ஐந்து பேர் பயணித்த காரின் பெட்ரோல் டேங்கில் பெட்ரோல் இருக்கிறதா என்று தீக்குச்சி கிழித்துப் பார்த்தார் ஒருவர். இருந்தது.'

கேள்வி பதில் பகுதிக்கு:
இதுவரை உங்களுக்கு 98 கெல்விகள் அனுப்பியிறுக்கிரேன். என்று கூட பிராசுறமாகவில்லையே என்?

எமதர்பாருக்கு மனிதன் ஒருவன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். எமன் வேறு ஏதோ கணக்கு வழக்குப் பார்த்துக்கொண்டிருந்ததால் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அங்கிருந்த உலகப்படத்தில் இந்தியாவில் டெல்லி பகுதியில் இரண்டு சிவப்பு விளக்குகள் எரிந்துகொண்டு இருந்தன‌. மனிதனின் திகைப்பைப் பார்த்த எமன், "யாராவது பொய் பேசினால் அந்த இடத்தில் சிவப்பு விளக்கு எரியும். இப்போது பிரதமரும் ஜனாதிபதியும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். " சற்று நேரத்தில் இந்தியா முழுக்க சிவப்பு விளக்கு எரிந்தது. பதறிப்போன மனிதனிடம் எமன் சொன்னான்: "இப்போது டெலிவிஷனில் நியூஸ் வாசிக்கிறார்கள்."

குற்றவாளி மரண தண்டனை அனுபவிக்க வேண்டிய இடத்தை அடைய முழங்கால் அளவு சேற்றைக் கடந்து போகுமாறு அமைத்திருந்தான் அரசன். அதைக் கடக்கும்போது, "சே, என்ன கொடுமை... என்னை நேரடியாத் தூக்கில் போட்டிருக்கலாமே..." என்றான் குற்றவாளி.
அதற்கு உடன் வந்த காவலன் சொன்னான், "உனக்காவது ஒரு தடவையோட போச்சு. நான் திரும்பி இதே பாதையில நடக்கணும்ங்கிறதை நினைச்சுப் பார்த்தியா?"

இன்டர்வியூ அதிகாரி: கஷ்டமான ஒரு கேள்வி கேட்கவா, ஈஸியான ரெண்டு கேள்வி கேட்கவா?
இன்டர்வியூவுக்கு வந்த நாதாரி: கஷ்டமான ஒரு கேள்வி.
இ.அ: கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா?
இ.வ.நா.:கோழி.
இ.அ.: எப்படிச் சொல்கிறாய்?
இ.வ.நா.: சார், ஒரு கேள்வி.....


அஞ்சுக்குள்ள ஒண்ணு போனா என்ன வரும்?
யாரவது பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்...