Thursday, July 9, 2009

கம்பன்

"ஒருத்தி இருக்கிறாள். ஒன்றுமில்லாமல் காலியாக இருக்கும் என் மனத்துக்குள் தன்னை அவள் இருத்திக்கொண்டாள். அவள் வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள். அறுபத்து நான்கு கலைகளையும் கருத்தில் வைத்திருப்பாள். நம் ஐம்புலன்களில் ஏதொன்றும் கலங்காமல் கருத்துகளைத் திருத்துபவள் அவள்தான். நான்கு திசையையும் பார்க்க நான்கு தலைகள் கொண்ட பிரமனின் தேவியான அவளை நான் ஒருபோதும் மறவேன்."


இது கம்பர் பாட்டு.
பாட்டைப் பாருங்கள் மேற்சொன்ன விளக்கத்தின் மொழிக்கு மிக நெருக்கத்தில் இருக்கும்.

பாட்டு:

ஒருத்தியை யொன்றுமி லாவென் மனத்தினு வந்துதன்னை
இருத்தியை வெண்கமலத் திப்பாளை யெண்ணெண் கலைதோய்
கருத்தியை யைம்புலனுங் கலங்காமற் கருத்தை யெல்லாம்
திருத்தியை யான்மற வேன்றிசை நான்முகன் தேவியையே.

வார்த்தைக் கோவைக்காக இதை இங்கே குறிப்பிடுகிறேன். மற்றபடி, ராமாயணத்தைத் தவிர, கம்பன் எழுதிய பிற நூல்கள் தென்படுவது அரிதிலும் அரிதாக இருக்கிறது. மேற்சொன்ன பாடல் சரஸ்வதி அந்தாதியில் வருகிறது. ‌

இந்த நூலின் பாயிரமாக இரண்டு பாடல்கள் உண்டு. ரசனைக்குரிய அந்தப் பாடல்கள் யாருக்காவது நினைவிருந்தால் சொல்லுங்களேன்.