tag:blogger.com,1999:blog-6256242422983569972024-03-13T02:40:12.416-07:00பேனாமினுக்கல்காலம் உன் கையில் கலங்காதிரு மனமே..ரமேஷ் வைத்யாhttp://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-625624242298356997.post-74174898282610420892017-05-23T02:52:00.000-07:002017-05-23T02:52:21.827-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal">
<span style="font-family: Latha;">இப்போதும் இனிக்கும் குறள்<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">Introduction
of kural history mystery motive<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">Characters:
தருண், குழலி, ராணி, தேவி, சாம், குமார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">தருண்:
பத்திரிகையில் பணி. பள்ளிக் காலத்திலேயே பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் பரிசு பெற்றவன்.
<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">குழலி:
தருணின் மனைவி. தமிழார்வம் உள்ள பெண்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">ராணி:
குழலியின் தமிழார்வத்துக்குக் காரணமான பெண். குழலியின் அம்மா. தமிழ் டீச்சர். வயது
42.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">தேவி:
தருணின் தங்கை. பள்ளி மாணவி. எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடீஸில் அண்ணனைப் போலவே விருப்பம்
உள்ள சிறுமி. வயது 17.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">சாம்:
தருணின் அலுவலக நண்பன். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">குமார்:
தருணின் அலுவலக நண்பன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<s><span style="font-family: Latha;">*<o:p></o:p></span></s></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">Begins<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">தேவி:
எங்க ஸ்கூல்ல திருவள்ளுவர் விழா கொண்டாடப்போறாங்க. நான் எல்லா ஈவெண்ட்ஸ்லயும் பார்ட்டிசிபேட்
பண்ணப் போறேன். பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி... <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">தருண்:
வாவ்… அருமை. திருவள்ளுவர் விழாவிலேயே கவிதைப் போட்டியா? தமிழ்ல இதுவரைக்கும் உள்ள
கவிஞர்களுக்கெல்லாம் தலைவர்னு திருவள்ளுவரைத்தானே சொல்ல முடியும். கவிதைப் போட்டி பொருத்தம்தான்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">குழலி:
எவ்வளவு நீதிகளை எல்லாம் சொல்லியிருக்காரு! அதுவும் எத்தனையோ காலத்துக்கு முன்னால…<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">தருண்:
அவரை வெறும் நீதி சொன்னவர்னு சுருக்கிட முடியுமா, குழலி? சொல்ற நீதியையும் கவிதையாச்
சொல்றதுக்குப் பேர்போனவர் திருவள்ளுவர். அதுக்கு எடுத்துக்காட்டா எத்தனையோ திருக்குறள்களைச்
சொல்லலாம். அப்பிடி கவிதையாக் கொட்டினதாலேதான் அவருக்கு, செந்நாப்போதார், பெருநாவலர்னு
எல்லாம் பேரு வச்சுக் கூப்பிட்டாங்க. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">சாம்:
திருவள்ளுவருக்கு இன்னும் வேற பேர்கள்கூட இருக்கு, இல்ல?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">குமார்:
ஆமாமாம். சின்ன வயசுல படிச்சிருக்கேன். நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர்,
நான்முகனார், மாதானுபங்கி… இப்பிடி நிறையப் பேர் வள்ளுவருக்கு உண்டு.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">தருண்:
அதே மாதிரி திருக்குறளுக்கும் நிறைய சிறப்புப் பேர்கள் இருக்கில்லையா? <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">குமார்:
யெஸ்… உலகப் பொதுமறை, பொய்யாமொழி, தெய்வ நூல், தமிழ் மறை… <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">ராணி:
குமார், அருமை. எப்பவோ படிச்சதை இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்க. திருவள்ளுவரோட அத்தனை
பேரையும் சொல்லிட்டீங்க. அந்தப் பேர்களோட அர்த்தத்தை எல்லாம் பாத்தா அதுவே ஒரு சுவாரசியம்…<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">சாம்:
ஆஹா… தமிழம்மா நீங்க உட்கார்ந்திருக்கிறதை ஒரு செகண்ட் மறந்துட்டு நாங்க சின்னப் புள்ளைங்க
பேசிட்டோம். அந்த அர்த்தங்களை நீங்க சொல்லுங்களேம்மா…<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">ராணி:
திருக்குறள் ரெண்டாயிரம் வருஷத்துக்கு முந்தினதுன்னு எல்லோரும் ஒப்புக்குறோம். தமிழ்ல
அதுக்கு முந்தி வேற எந்த புத்தகமும் இல்லை. உலக நாடுகள் எல்லாமும் கூட இதை ஒப்புக்கிட்டதால
திருக்குறளுக்கு முந்தி புத்தகமே இல்லைன்னு எடுத்துக்கலாம் இல்லையா? அதனாலதான் முதல்
புத்தகத்தை எழுதின திருவள்ளுவரை ‘முதற்பாவலர்’னு சொல்றாங்க. செய்யுளைப் பாடல்னும் சொல்ற
வழக்கம் தமிழ் இலக்கியத்துல இருக்கு. தன்னோட கருத்துகளை எல்லாம் செய்யுள் வடிவத்துல,
அதாவது பாடல் வடிவத்துல எழுதுறவர் பாவலர். அதில் முதல் ஆள், திருவள்ளுவர், அதனால அவர்தான்
‘முதற்பாவலர்’. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">குழலி:
எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆச்சரியம்மா… எழுதணும்னு திருவள்ளுவருக்கு எப்பிடித் தோணியிருக்கும்?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">தருண்:
அப்பிடிப் போடு, அத்தை, இதுக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">ராணி
(சிரித்துக்கொண்டே): குழலி கேக்குறது அற்புதமான சந்தேகம். ஒரு நிமிஷம் நினைச்சுப் பாருங்க.
ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னால மனுஷங்களோட சூழ்நிலை எப்பிடி இருந்திருக்கும்? டெக்னாலஜி
கிடையாது, நல்ல வீடு கிடையாது; ஏன், கரண்ட்கூடக் கிடையாது. வாழணும்னா, நாமளே உடல் உழைப்பு
செஞ்சாத்தான் உண்டு. அந்தச் சூழ்நிலையில ஒரு மனுஷனுக்கு தோணியிருக்கு, தனக்குத் தெரிஞ்ச
உண்மைகளை, நியாயங்களை இந்த உலகத்துக்குச் சொல்லணும்னு. அதுவும் மனசுல பதியிற மாதிரி
சந்தத்தோட, இலக்கணத்தோட! குகைக்குள்ளேயும் குடிசைக்குள்ளேயும் தங்கிக்கிட்டு, மழை எப்ப
வருமோ, புயல் எப்ப தாக்குமோன்னு பயந்துக்கிட்டு, பழம் எங்கே கிடைக்கும், கிழங்கு எங்கே
அகழ்ந்து எடுக்கலாம்னு கவலைப்பட்டுக்கிட்டு இருக்குற கூட்டத்துல ஒரு மனுஷனுக்கு மட்டும்
எழுதணும்னு தோணியிருக்கே… அதுதான் க்ரியேட்டிவிடி. படைப்பூக்கம். அந்த இக்கட்டுகளுக்கு
மத்தியிலேயும் எந்த விமர்சனத்தையும் அங்கீகாரத்தையும் எதிர்பார்க்காம எழுதின அந்த மனசுக்காகத்தான்
திருவள்ளுவருக்கு, மனிதர்களுக்கு மத்தியில ‘தேவன்’ அப்டீன்னு பேர். அதே காரணத்துனாலதான்
தெய்வப் புலவர்னும் சொன்னாங்க. படைப்புக்கடவுள் பிரம்மனோட பேரான ‘நான்முகனார்’னும்
திருவள்ளுவரைக் குறிப்பிட்டாங்க…<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">தருண்:
அங்கீகாரம் கிடைக்காட்டிக் கூடப் பரவாயில்லை, எவ்வளவு கேலி, கிண்டல்களை சந்திச்சிருப்பாரு…<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">சாம்:
அதே, அதே… மனசுக்குத் தோணினதை எல்லாம் ஃபேஸ்புக்குல போட்டுட்டு, அருமை தோழர், பிரமாதம்
சகோன்னு கமெண்ட் பாக்க முடியுமா அப்பல்லாம்? <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">குமார்:
திருக்குறள் முதல் முதல்ல அச்சுலே வந்ததே, 1812- லதான். அச்சுக்குக் கொண்டுவந்தவர்
தஞ்சை ஞானப்பிரகாசர்னு சொல்றாங்க.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">ராணி:
ஸோ, எழுதும்போது பனை ஓலையில தான் கீறிக் கீறித்தான் எழுதியிருப்பார். திருவள்ளுவரோட
ஆணி முக்கியம்தானே?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">குழலி:
ஹாஹாஹா… அம்மா பழசுலேருந்து டக்குனு கரண்ட் ட்ரெண்டுக்கு மாறுறாங்க பாருங்க…<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">தேவி:
திருக்குறள்ங்கிற புத்தகத்தை எழுதின திருவள்ளுவருக்குப் பின்னாடி இவ்வளவு ஸ்பெஷாலிட்டி
இருக்கா?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">ராணி:
வெயிட் வெயிட். திருவள்ளுவர், திருக்குறள்ங்கிற புத்தகத்தை எழுதலை. அவர் அப்பப்ப எழுதின
சிந்தனைகள்தான் பிற்காலத்துல புத்தகமா மாறிச்சு. அவர் எழுதினது எல்லாம், குறள் வெண்பாங்கிற
இலக்கணத்துக்குள்ள அடங்கி இருந்ததால அதுக்கெல்லாம் குறள்னு பேர் வந்துது. பெருமையாச்
சொல்றதுக்காக, திருக்குறள்னு வச்சாங்க. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">குமார்:
ஓ… குறள் வெண்பாங்கிற இலக்கணத்துக்குள்ளதான் திருக்குறள் இருக்கா?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">ராணி:
ஆமா, இப்போ, ட்விட்டர்ல நூத்தி நாப்பது எழுத்துக்குள்ள (கேரக்டர்) விஷயத்தைச் சொல்லணும்னு
வச்சிருக்காங்களே, அது மாதிரி. நாலு ப்ளஸ் மூணு சீர்ல, அதாவது ரெண்டு அடியில விஷயத்தைச்
சொல்லி முடிக்கணும். அதான் குறள் வெண்பா. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">குழலி:
எப்பிடி கச்சிதமா நூத்தி முப்பத்து மூணு டாபிக், ஒவ்வொரு டாபிக்குக்கும் பத்து குறள்னு
ஆயிரத்து முன்னூத்து முப்பது குறள் எழுதணும்னு முடிவு பண்ணினார் வள்ளுவர்? <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">ராணி:
இல்லை இல்லை, அவர் நிறைய எழுதினாராம். பிற்காலத்துல தேடினவங்களுக்குக் கிடைச்சது
1330 குறள்கள்தானாம். இப்படி ஒரு வரலாறும் இருக்கு. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">தருண்:
அட! அந்த காணாமப் போன குறள்களும் கிடைச்சிருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்…<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">சாம்:
இப்பவே, வள்ளுவர் தொடாத டாபிக்கே இல்லைங்கிற மாதிரிதானே இருக்கு… <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">தேவி:
இன்னிக்கு இருக்குற சூழ்நிலை வேற ஆச்சே… டெக்னாலஜி இம்ப்ரூவ்மெண்ட், மாடர்ன் ப்ராப்ளம்ஸ்…<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">தருண்:
இல்லம்மா… ஃபேஸ்புக் பத்தி திருக்குறள் இருக்கான்னு பார்க்கக் கூடாது. ஃபேஸ்புக்குங்கிறது
என்ன? ஒரு தகவல் தொடர்பு சாதனம். பிறரோட நாம உறவாட, உரையாட ஒரு கருவி. அதுல எப்படி
நடந்துக்கணும், எந்த மாதிரி பேசக்கூடாதுங்கிற எட்டிக்கெட் எல்லாம் இருக்கு இல்லையா?
அதை வள்ளுவர் அப்பவே சொல்லி வச்சிருக்காரு. ‘ஃபேஸ்புக்ல சும்மா வளவளன்னு எழுதினா யாரும்
படிக்க மாட்டாங்க. டு தி பாயிண்ட் எழுதினாத்தான் லைக்ஸும் கமெண்ட்ஸும் கிடைக்கும்’னு
வள்ளுவர் எழுத வாய்ப்பில்லை. ஆனா, ‘இன்னிக்கு தேவி போட்டுருக்கிற ஸ்டேட்டஸ் காலையில
இருந்து மனசுல சுத்திக்கேட்டே இருக்குடி’ன்னும்; ‘இன்னிக்கு தேவி ஃபேஸ்புக்ல ஏதோ ஸ்டேட்டஸ்
அப்டேட் பண்ணியிருக்காளாமே… எல்லாரும் அதைப் பத்தியே பேசுறாங்களே’ன்னும் சொல்ற மாதிரி
ஸ்டேட்டஸ் போடணும். இந்த அர்த்தத்துலதான் வள்ளுவர், <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">‘கேட்டார்ப்
பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">வேட்ப
மொழிவதாம் சொல்’ ங்கிற குறள்ல சொல்றாரு…<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">தேவி:
ஓ.எம்.ஜி… வள்ளுவர் இஸ் அமேஜ்ஸிங்…<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">குழலி:
ஓ மை காட்ங்கிறதை தேவி எப்பிடிச் சொல்றா பாருங்க… இதே மாதிரிதானே வள்ளுவர் ரெண்டே வரியில
தான் சொல்ல வந்த கருத்தை முழுசாச் சொல்லியிருக்கார்..!<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">தருண்:
அதனாலதானே மத்த புலவர்கள் எல்லாம் திருவள்ளுவரைத் தலையில தூக்கி வச்சுக் கொண்டாடினாங்க.
<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">ராணி:
ஆமாமா… ‘கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்’னு கொண்டாடினார்
இடைக்காடர்ங்கிற புலவர். கடுகு உதாரணம்கூட ஔவையாருக்குப் பொருத்தமாத் தோணலை. அதனால,
‘அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்’னு மேலேயும் பெருமை சேத்தாங்க.
<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">தருண்:
கரெக்டாச் சொன்னீங்க அத்தை. இந்தப் பாட்டுகளை கூகுள்ல தேடும்போது எனக்கு இன்னும் சுவாரசியமான
சில பாட்டுகள் கிடைச்சுது. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">‘வெள்ளி
வியாழம் விளங்கிரவி வெண்திங்கள்<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">பொள்ளென
நீக்கும் புறஇருளை – தெள்ளிய<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">வள்ளுவ
ரின்குறள் வெண்பா அகிலத்தோர்<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">உள்ளிருள்
நீக்கும் ஒளி’ ன்னு மதுரைப் பாலாசிரியனார் பாடியிருக்கார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">ஆலங்குடி
வங்கனார்னு இன்னொரு புலவர்,<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">‘வள்ளுவர்
பாட்டின் வளம்உரைக்கின் வாய்மடுக்கும்<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">தெள்ளமுதின்
தீஞ்சுவையும் ஒவ்வாதால் – தெள்ளமுதம்<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">உண்டறிவார்
தேவர் உலகடைய உண்ணுமால்<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">வண்டமிழின்
முப்பால் மகிழ்ந்து’ <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">பாடியிருக்கார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">பலப்பல
வருஷங்களுக்கு அப்பறமா வந்த பாரதியாருக்குக்கூட வள்ளுவர் மேல ஆச்சரியம் குறையலையே…<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">‘யாமறிந்த
புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர்போல் இளங்கோவைப் போல்<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">பூமிதனில்
யாவருமே பிறந்ததில்லை; உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை’ன்னு சொல்லிச் சொல்லிப் பாராட்டினார்.
<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">ராணி:
எல்லாக் காலத்திலேயும் எல்லாருக்கும் தேவையான எல்லா மருந்தும் திருக்குறள்ல இருக்கும்.
அதிலேயும், திருக்குறள் ஒரு மெடிக்கல் ஷாப் மாதிரின்னுகூடச் சொல்லலாம். பேதி ஆகுறதுக்கும்
மருந்து இருக்கும். பேதியை நிறுத்துறதுக்கும் மருந்து இருக்கும். நமக்கு அந்த நேரத்துக்கு
எது தேவையோ அதை எடுத்துக்கலாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">தருண்:
அத்தை இஸ் அமேஜ்ஸிங்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">சாம்:
சமூகத்தோட நோயைத் தீர்க்குற மருந்தை மட்டும் திருக்குறள் குடுக்கலை; சமூகத்துக்கு நோய்
வராம இருக்குறதுக்கும் ப்ரிவென்ஷன் மெத்தட்ஸ் சொல்லுது. அந்த வகையில திருக்குறள் கிரேட்தான்…<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">குமார்:
அந்த ஸ்பெஷாலிட்டி இருக்கறதாலதானே ஏராளமான உலக மொழிகள்ல திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கு…
<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">தருண்:
ஆமா, பைபிள்தான் உலகத்திலேயே அதிகமான மொழிகள்ல வந்திருக்கு. அது மத நூல். அப்பிடி ஒரு
மத நூலா இல்லாத புத்தகம் திருக்குறள். இருந்தாலும், பைபிளுக்கு அடுத்த படியா நூத்துக்கும்
அதிகமான மொழிகள்ல மொழிபெயர்க்கப்பட்டு உலகத்தோட எல்லாப் பகுதிகள்லேயும் இதை ஆர்வமாவும்
ஆச்சரியத்தோடவும் படிக்கிறாங்க.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">தேவி:
சந்தேகமே இல்லாம, திருக்குறளை, ‘தமிழோட பெருமை’ன்னு சொல்லலாம் இல்லையா, ஆன்ட்டி?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">ராணி:
அதுல என்ன சந்தேகம்? ஆனா, அப்படிப்பட்ட திருக்குறள்ல ‘தமிழ்’னு ஒரு சொல்லே இல்லை!!<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">தேவி:
ஹைய்ய்யோஓஓஓ… சூப்பர்…<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">ராணி:
இதுக்கே அசந்தா எப்பிடி? இன்னும் இது மாதிரி நிறைய சுவாரசியங்கள் திருக்குறள்ல உண்டு.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">சாம்:
ப்ளீஸ் சொல்லுங்க தெரிஞ்சுப்போம். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">ராணி: கடவுள்ங்கிற சொல் கூட குறள்ல இல்லை. எழுத்துன்னு
எடுத்துக்கிட்டா, குறள்ல வராத ஒரே உயிரெழுத்து ஔ. வராததை விட்டுறலாம். வந்ததைப் பார்த்தா,
பற்று-ங்கிற வார்த்தை ஒரே குறள்ல ஆறு தடவை வந்திருக்கு. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">தேவி:
ஐ… எனக்கு அந்தக் குறள் தெரியும்… ‘பற்றுக பற்றற்றான் பற்றினை – அப்பற்றைப் பற்றுக
பற்று விடற்கு. சரிதானே…<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">ராணி:
தேவி சொன்னா தப்பா இருக்குமா? இன்னும் கவனமா திருக்குறளைப் படிச்சேன்னா, திருக்குறளுக்கு
நீ குட்டிப் பசங்களுக்கான உரையே எழுதலாம். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">தேவி:
வாவ்…<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">ராணி:
முதல் முதல்ல திருக்குறளுக்கு உரை எழுதினவர், மணக்குடவர். அப்பறம் எத்தனையோ பேர் எழுதிட்டாங்க.
மு.வரதராசனார் எழுதின உரை ரொம்ப ஃபேமஸ். அதே மாதிரி திருக்குறளை இங்லீஷ்ல முதல்ல மொழி
பெயர்த்தவர் ஜி.யூ. போப். இன்னிக்கு வரைக்கும் பல மொழிகள்ல மொழி பெயர்த்துக்கிட்டுத்தான்
இருக்காங்க. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">சாம்:
இன்னிக்கும் குறள் ரெலவண்ட்டா இருக்கே… <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">ராணி:
இன்னிக்கு இருக்கிற சூழ்நிலையில திருக்குறள் எவ்வளவு பொருத்தமானதுன்னு தான் தொடர்ந்து
பேசப்போறோம் இல்லையா…<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">தருண்:
நிச்சயமா அத்தை. அந்த பேச்சுல இருந்தே தேவி தன்னோட போட்டிகளுக்குத் தேவையான ஸ்டஃப்-ஐ
எல்லாம் எடுத்துப்பா…<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">*<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">பரிந்துரைக்கப்படக்
கூடிய தமிழ்த் திரைப் பாடல்கள்<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="font-family: Latha;">நான்
பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<br /></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="background: white; font-family: Latha;">அறிவுக்கு</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">விருந்தாகும்</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">திருக்குறளே</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> ...... <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<br /></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="background: white; font-family: Latha;">அறிவுக்கு</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">விருந்தாகும்</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">திருக்குறளே</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">வள்ளுவர்</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="background: white; font-family: Latha;">ஆக்கி</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">நமக்களித்த</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">அரும்</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">பொருளே<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="background: white; font-family: Latha;">உலகுக்கு</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">ஒளிபோலே</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">உடலுக்கு</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">உயிர்போலே</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="background: white; font-family: Latha;">பயிருக்கு</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">மழைபோலே</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">பைந்தமிழ்</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">மொழியாலே</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="background: white; font-family: Latha;">அறிவுக்கு</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">விருந்தாகும்</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">திருக்குறளே</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="background: white; font-family: Latha;">அறம்</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">பொருள்</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">இன்பம்</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">எனப்படும்</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">முப்பாலே</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="background: white; font-family: Latha;">அனுபவத்தாலே</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">தான்</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">சுவைத்ததற்கப்பாலே</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="background: white; font-family: Latha;">அவனியில்</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">உள்ளோர்கள்</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">அனைவரும்</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">தலைபோலே</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="background: white; font-family: Latha;">அவசியம்</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">கற்றுணர்ந்து</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">பயன்</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">பெறும்</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">நினைப்பாலே</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="background: white; font-family: Latha;">அறிவுக்கு</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">விருந்தாகும்</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">திருக்குறளே</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="background: white; font-family: Latha;">வாழும்</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">வழிமுறைக்கு</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">இலக்கணமானது</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="background: white; font-family: Latha;">மனம்</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">மொழி</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">மெய்யினிக்கே</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">வார்த்திட்ட</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">தேனிது</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="background: white; font-family: Latha;">வானகம்</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">போல்</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">விரிந்த</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">பெரும்</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">பொருள்</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">கொண்டது</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="background: white; font-family: Latha;">எம்</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">மதத்துக்கும்</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">பொதுவென்னும்</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">பாராட்டைக்</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">கண்டது<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="line-height: 200%;">
<span style="background: white; font-family: Latha;">அறிவுக்கு</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">விருந்தாகும்</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span><span style="background: white; font-family: Latha;">திருக்குறளே…</span><span style="background: white; font-family: Arial, sans-serif;"> </span></div>
</div>
ரமேஷ் வைத்யாhttp://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.com0India13.752724664396988 79.453125-1.7046108356030114 58.798828 29.210060164396985 100.107422tag:blogger.com,1999:blog-625624242298356997.post-9917918275534218242016-06-10T02:09:00.003-07:002017-05-23T02:54:44.425-07:00தன்னைத் தானே கவனித்தல்..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சுஷில் குமார்... சீனாவில் 2008&ல் நடந்த ஒலிம்பிக்கில் வெண்கலம், இப்போது லண்டனில் வெள்ளிப் பதக்கம் என அடுத்தடுத்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியர். இப்படி மகத்தான சாதனை படைப்பதற்கோ அல்லது தான் குறித்துக்கொண்ட குறிக்கோளைச் செம்மையாக முடிப்பதற்கோ ஒரு சிலருக்கு மட்டும் எப்படி முடிகிறது?<br />
<br />
பிறரிடம் இல்லாத ஏதோ ஓர் உந்துசக்தி அவர்களிடம் இருக்கிறது. இதைச் செய்ய வேண்டும், இதில் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணம் எல்லோரிடமும் இருக்கும். பத்தாம் வகுப்பிலும் 12&ஆம் வகுப்பிலும் மாநில அளவில் ரேங்க் வாங்க வேண்டும் என்கிற ஆசை யாரிடம்தான் இருக்காது? ஆனால், சிலர்தானே அதைச் சாதிக்கிறார்கள்... அதற்கு அவர்களுக்குப் பெரிய அளவில் உதவியாக இருந்தது உந்துசக்தி. ஆங்கிலத்தில் Motivation.<br />
<br />
படிப்பது, வேலைக்குப் போவது, பணம் சம்பாதிப்பது, பிறருடனான உறவுகளைச் சிறப்பாகப் பேணுவது போன்ற பல்வேறு காரியங்களுக்கு முக்கியமான ஒத்தாசையாக இருப்பது இந்த உந்துசக்திதான். நமக்கு உள்ளே இருந்தே உந்துசக்தி நமக்குக் கிடைக்கும். சில சமயம் வெளியில் இருந்தும் உருவாகி வரும். ஒவ்வொரு நபருக்கும் தக்கபடி இந்த உந்துசக்திக்கான காரணங்கள் மாறுபடும். ஊக்கப்படுத்துதல், பரிசுகள், பணம், புகழ் போன்றவை சில காரணங்கள்.<br />
உங்களுக்குப் பிடித்த ஒரு சினிமா நடிகரை எடுத்துக்கொள்ளுங்கள், ரசிகர்களின் பாராட்டுகள் அவரை ஊக்கப்படுத்தி இருக்கும். விருதுகளும் பரிசுகளும் அவரை அடுத்த படிக்கு இட்டுச் சென்றிருக்கும். அதனால் அவரது சன்மானப் பணம் படிப்படியாக உயர்ந்து, மேலும் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை அவருக்கு ஏற்படுத்தி இருக்கும். இதனால் அவரது புகழ் அதிகரித்து, அந்தப் புகழைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே என்கிற எண்ணம்கூட அவருக்கு ஒரு முக்கியமான உந்துசக்தியாக இருந்து இருப்பதை நீங்கள் உணர முடியும்.<br />
<br />
இந்த உந்துசக்தியின் அளவுகூட நேரத்துக்கு நேரம் மாறுபடும் தன்மை உடையது. நம்பிக்கை, பிறரின் உதவியைப் பயன்படுத்திக்கொள்ளல், தன்னம்பிக்கை, கடின உழைப்பு, ஒரு வேலையைத் தொடர்ந்து செய்யும் தன்மை, ஒழுக்கம் போன்ற பல தகுதிகள், இந்த உந்துசக்தியின் அளவை அதிகரிக்கும். இப்போது விளையாட்டாக ஒரு கற்பனையைப் பார்ப்போம். நீங்கள் ஒரு பென்சில் டிராயிங் படத்துக்கு கலர் அடிக்கப்போகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு உதவி செய்ய உங்கள் நண்பர் ஒருவர் பக்கத்தில் இருக்கிறார். இதில் மூன்று விதமான சூழ்நிலைகளைக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.<br />
<br />
சூழ்நிலை - 1:<br />
<br />
நீங்கள் கலர் அடிக்க விரும்பும் வண்ணத்திலான பென்சில்களை உங்கள் நண்பர் உடனே எடுத்துக்கொடுக்கிறார். படத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் நீங்கள் கலர் அடித்து முடிக்கும்போது, நண்பர் உங்களைப் பாராட்டிக் கை தட்டுகிறார்.<br />
<br />
நீங்கள் ஏதாவது தவறு செய்துவிட்டால் ‘பரவாயில்லை, மறுபடி முயற்சி செய்..’ என்கிறார்.<br />
<br />
சூழ்நிலை - 2:<br />
<br />
நீங்கள் ஒரு கலரில் பென்சில் கேட்டால், நண்பர் இன்னொரு கலரை எடுத்துக் கொடுக்கிறார். சரியான கலரைக் கொடுத்தால், அவர் கொடுக்கும் பென்சில் கூர் இல்லாமல் மொட்டையாக இருக்கிறது. தூரத்தில் இருந்து பென்சிலைத் தூக்கிப் போடுகிறார். ‘என்ன, மரம் சிவப்பு கலர்ல இருக்கு’ என்று கிண்டல் செய்கிறார்.<br />
<br />
சூழ்நிலை - 3:<br />
<br />
உங்கள் நண்பர் எந்த விதமான உணர்வுகளையும் காட்டவில்லை. கேட்ட பென்சிலைக் கொடுக்கிறார். நீங்கள் கலர் அடிப்பதைப் பார்க்காமல் வேறு எதிலோ கவனமாக இருக்கிறார். கலர் அடித்தது நன்றாக இருந்தால் பாராட்டவில்லை. மோசமாக இருந்தால் சுட்டிக்காட்டுவதும் இல்லை.சரியா... இப்போது இந்த மூன்று சூழ்நிலைகளிலும் நீங்கள் கலர் அடித்த ஓவியம் என்ன மாதிரி இருக்கும் என்று நீங்களே சொல்லுங்களேன்... முதல் சூழ்நிலையில் நீங்கள் பிரமாதப்படுத்தி இருப்பீர்கள்.சூழ்நிலை இரண்டில் கலர் அடித்து முடிப்பதே மிகவும் கஷ்டமாக இருந்திருக்கும். உங்கள் நண்பரின் ஒத்துழையாமை இயக்கத்தையும் மீறி நீங்கள் கலர் அடித்தது ரொம்பவே சுமாராக இருக்கும். சூழ்நிலை மூன்றிலும் நிலைமை ஒன்றும் சுகம் இல்லை. திட்டும் கிடைக்காமல் பாராட்டும் இல்லாமல் கலர் அடிப்பது என்கிற சந்தோஷமான காரியத்தை, ஏதோ கடமைக்குச் செய்ததைப் போலச் செய்து முடித்திருப்பீர்கள். இப்போது ‘உந்துசக்தி’ பற்றிய ஒரு சித்திரம் உங்களுக்குக் கிடைக்கிறது அல்லவா?இன்னொரு விஷயத்தையும் இந்த இடத்தில் பார்க்க வேண்டி இருக்கிறது. அமிதாப் பச்சன், சிவாஜி கணேசன் என்கிற இரண்டு சினிமா நடிகர்கள் ஆரம்பத்தில் சின்ன வேடத்துக்குக்கூட லாயக்கு இல்லை என்று பல இயக்குநர்களாலும் தயாரிப்பாளர்களாலும் ஒதுக்கப்பட்டவர்கள். கேரம் விளையாட்டு சாம்பியன் இளவழகிக்கு அரசு வழங்குவதாகச் சொன்ன பரிசுப் பணம் வருடக்கணக்காகத் தரப்படாமல் இழுத்தடிக்கப்படும் செய்தியையும் பத்திரிகைகளில் படித்து இருப்பீர்கள். ஆனாலும் மேலே குறிப்பிடப்பட்டவர்கள் தங்கள் துறைகளில் செய்த, செய்துவரும் சாதனைகளை நம்மால் வியந்து பாராட்டாமல் இருக்க முடியாது. இவர்களுக்கு உதவியது, இவர்களுக்கு உள்ளேயே சேமித்து வைக்கப்பட்ட உந்துசக்தி. இந்த சுய உந்துசக்தியைக்கொண்டு நாம் ஏன் வெற்றிகளை சாத்தியப்படுத்திக்கொள்ளக் கூடாது?நம் அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு நாம் தேர்ந்தெடுத்துக்கொண்ட சரியான பாதையில் இருந்து விலகாமல் இருப்பது நமது பொறுப்பு. நாம் ஒருவேளை உடனடியாக வெற்றி பெறாமல் போகலாம். ஆனாலும், நமது சுய உந்துசக்தியையும் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கைவிட்டுவிடக் கூடாது. எப்போதும் உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் இருப்போம்.ஒரு தோல்வியில் இருந்து இன்னொரு தோல்விக்குச் சென்றாலும் உற்சாகத்தை இழந்துவிடாமல் இருப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். விழுவது அல்ல தோல்வி; விழுந்தாலும் எழாமல் இருப்பதுதான் தோல்வி என்கிற பழமொழி உங்களுக்குத் தெரியும்தானே..?<br />
<br />
வெற்றிக்கு உந்துசக்தியே முக்கியமானது.<br />
வெளியில் இருந்து உந்துசக்தி கிடைக்காவிட்டாலும், உள்ளே இருக்கும் உந்துசக்தியைக் கண்டடைந்து பயன்படுத்துவோம்.<br />
பிறருக்கு உந்துசக்தியாக இருப்பதையும் தொடர்வோம்.<br />
புரிந்துகொள்வோம் உந்துசக்தியை.<br />
<br />
நாம் ஏன் ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்பதற்கான காரணத்தை உணர்த்துவதும் உந்துசக்தியே.<br />
<br />
நாம் நடந்துகொள்ளும் விதத்துக்கு நோக்கத்தைக் கொடுத்து, திசையைக் காட்டுவதுமே உந்துசக்தி.குறிப்பிட்ட விதத்தில் நடந்துகொள்வது அல்லது ஒரு குறிப்பிட்ட வேலையை எடுத்துக்கொள்வதற்கு எது உங்களைச் செலுத்துகிறதோ, தூண்டுகிறதோ அதுவே உந்துசக்தி.நமக்கு ஒரு விஷயம் வேண்டும் என்று உறுதியாக ஆசைப்பட்டால், அதை அடைவதற்கான வழி நமக்குத் தெரியாவிட்டாலும் நாம் முயற்சிப்பதை நிறுத்திவிடக் கூடாது. உண்மையிலேயே நாம் ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்று விரும்பினால், உலகமே அதற்கான சூழ்நிலைகளையும் வாய்ப்புகளையும் தேவையான நபர்களையும் உதவிகளையும் நமக்குக் கொடுக்கும் என்று பரவலாகச் சொல்லப்படுவது உண்டு.அசாத்தியம் என்று தோன்றுவதைக்கூட சாதிக்க தேவை, தொலைநோக்குப் பார்வை, கனவு, ஆழ்ந்த விருப்பம் போன்றவை உதவும். தடைகளைத் தாண்டி முன்னேறவும் தோல்வி, ஊக்கமின்மை போன்றவற்றில் இருந்து மேலேறி வரவும் நாம் பழக வேண்டும். சாதனை என்றால் அதற்கு முன்பாக, தடைகளும் தோல்விகளும் இருக்கத்தான் செய்யும். அவற்றில் இருந்து மேலேறி வரப் படைப்பூக்கம் மிக்க சிந்தனை அவசியம். மாணவர்களைப் பொறுத்தவரை உந்துசக்தி கீழ்க்கண்ட மூன்று விஷயங்களைச் சார்ந்து இருக்கிறது.1.சிறப்பாக இருந்தாலும் சரி, சுமாராக இருந்தாலும் சரி.. பழைய வேலைகளை முழுமையாகப் புரிந்துகொள்ளுதல். 2.மற்றவர்களுக்கு முன்னால் வெற்றிகரமாகத் தோற்றம் அளிப்பது என்பதைவிட, எடுத்துக்கொண்ட குறிக்கோளில் கவனமாக இருப்பது.3.பிறரிடம் இருந்து கற்றுக்கொள்ளும் சுய தீர்மானம்.</div>
ரமேஷ் வைத்யாhttp://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-625624242298356997.post-87528327384721721592016-06-10T01:48:00.002-07:002016-06-10T01:59:09.529-07:00உங்களைத் தெரியுமா உங்களுக்கு 01<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal">
<span style="font-family: "a002_tamelango_abirami bold";">நமக்கு அது தெரியும், இது தெரியும் என்பது ஒரு பக்கம் இருக்க, முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது நம்மை. யாருக்காவது தன்னையே தெரியாமல் போகுமா என்று கேள்வி எழலாம். ஆனால், நம்மைப் பற்றி நாம் நன்றாகத் தெரிந்துகொள்வது வாழ்க்கைத் திறன்களில் முக்கியமான ஒன்று. உதாரணத்துக்கு, உங்களுக்கு எப்போது எல்லாம் தூக்கம் வரும்? இந்தக் கேள்விக்கு சரியான விடை தெரிந்தால், நாம் தூக்கத்தைக்கூட நமக்கு பலன் தரும் விதத்தில் பயன்படுத்த முடியும். இதுபோல சின்னச் சின்ன விஷயங்களின் மூலமாகப் பெரிய பெரிய விஷயங்களை விளக்குவதுதான் இந்தக் குட்டித் தொடர் கட்டுரைகளின் வேலை.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "a002_tamelango_abirami bold";">‘‘அவனும் மூணு மணி நேரம்தான் படிக்கிறான். நானும் மூணு மணி நேரம்தான் படிக்கிறேன். ஆனா, எப்பவுமே அவன்தான் க்ளாஸ் ஃபர்ஸ்ட். அது எப்படி?”</span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "a002_tamelango_abirami bold";">“தினமும் பிராக்டீஸ் பண்றேன். அப்படியும் அவ 11 நிமிஷத்துல முடிக்கிற தூரம் எனக்கு 14 நிமிஷம் எடுக்குது.”</span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "a002_tamelango_abirami bold";"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "a002_tamelango_abirami bold";">இப்படி நாம் அடிக்கடி கேட்கிற வசனங்கள் நிறைய. இதில் இருந்து என்ன தெரிகிறது? படிக்கிற நேரம், தொடர்ந்து பிராக்டீஸ் இவை இருந்தும் வெற்றிக்கு வேறு ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. அது என்ன?</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "a002_tamelango_abirami bold";">ஓர் இடத்தில் தெளிவாகக் குவிக்கப்பட்ட கவனம்!</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "a002_tamelango_abirami bold";">கவனம் இல்லாமல் அல்லது கவனச் சிதறலோடு நீங்கள் 10 மணி நேரம் படித்தாலும் அது மனதில் தங்கும் என்று நினைக்கிறீர்களா?</span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "a002_tamelango_abirami bold";"><br /></span>
<span style="font-family: "a002_tamelango_abirami bold";">முழு ஆர்வம், ஒருமுகப்படுத்தல் ஆகியவைதானே கவனக்கூர்மைக்கு அடிப்படை? இதைத் தொடர்ந்து கடைப்பிடித்தால்தான் ஒரு பழக்கமாக நமக்குள் வளரும்.</span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "a002_tamelango_abirami bold";"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "a002_tamelango_abirami bold";">இந்த கவனக் கூர்மை என்பது நம்மை எப்படி எல்லாம் பாதிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு சின்ன விளையாட்டு.</span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "a002_tamelango_abirami bold";"><br /></span>
<span style="font-family: "a002_tamelango_abirami bold";">நண்பர்கள் ஆறேழு பேர் வட்டமாக உட்கார்ந்துகொள்ளுங்கள். ஆளாளுக்கு வரிசையாக ஒரு நபரின் பெயரைச் சொல்வதுதான் விளையாட்டு. வாய்க்கு வந்த பெயரைச் சொல்லக் கூடாது. முதல் ஆள் ஒரு பெயரைச் சொன்னதும் அது ஆங்கிலத்தில் என்ன எழுத்தில் முடிகிறதோ, அந்த எழுத்தில் ஆரம்பிக்கும் ஒரு பெயரை அடுத்த ஆள் சொல்ல வேண்டும். இப்படியாக அடுத்த அடுத்த ஆட்கள் தொடரட்டும்.</span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "a002_tamelango_abirami bold";"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "a002_tamelango_abirami bold";">விளையாட்டில் சுவாரசியத்தைக் கூட்டுவதற்காக இடையில் நிறுத்தி Cat, Tiger, Rhino என்று விலங்குகளின் பெயரைச் சொல்ல ஆரம்பிக்கலாம். இப்படியே நகரங்கள், நதிகள் என்று தொடரலாம். இப்படிச் சில சுற்றுகள் விளையாடி முடித்ததும் யோசிப்பதற்காக ஓர் இடைவேளை விடுங்கள்.</span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "a002_tamelango_abirami bold";">உங்கள் கவனத்தைச் சிதறடிக்கும்படி என்னென்ன விஷயங்கள் நடந்தன? எவை உங்களைத் திசை திருப்பின? எந்தெந்த விஷயங்கள் உங்கள் கவனத்தைக் கூர்மைப்படுத்த உதவின? இதன் அடிப்படையில் படிப்பில் கவனக்கூர்மையை செழுமைப்படுத்திக்கொள்ளலாம்.</span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "a002_tamelango_abirami bold";"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "a002_tamelango_abirami bold";">இந்த விளையாட்டில் பங்கேற்ற ஒவ்வொருவரிடமும் பேசினால், ஒவ்வொரு விஷயம் வெளிப்படுவதை உணரலாம். </span><span style="font-family: "a002_tamelango_abirami bold";">விளையாட்டு பிடித்து இருந்தது, வெளியில் இருந்து வந்த சத்தத்தால் கவனம் சிதறியது, பெயரைச் சொல்லி முடித்தவர்கள், அடுத்தவருக்கு க்ளூ கொடுக்கிறேன் என்று கவனத்தைக் குறையச் செய்தார்கள்... இப்படிப் பல விஷயங்களை அறியலாம்.</span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "a002_tamelango_abirami bold";"><br /></span>
<span style="font-family: "a002_tamelango_abirami bold";">டி.வி., சினிமா பார்ப்பது, கதை படிப்பது, விளையாடுவது போன்றவை பலருக்கும் ஜாலியாக இருக்கும். இதுபோன்ற விஷயங்களில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வமே காரணம். ஆர்வம் கவனக்கூர்மைக்கு உதவக்கூடியது. கவனக்கூர்மை என்பது ஞாபக சக்தியை வளர்த்துக்கொள்ள உதவும்.</span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "a002_tamelango_abirami bold";"><br /></span>
<span style="font-family: "a002_tamelango_abirami bold";">சத்தம், ஆர்வமின்மை போன்றவை கவனக்கூர்மையைக் குறைக்கும்.</span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "a002_tamelango_abirami bold";">சிறப்பான கவனக்கூர்மை நேரத்தை மிச்சப்படுத்துகிறது. கவனக்கூர்மையை அதிகப்படுத்திக்கொள்ள சில எளிய வழிமுறைகள் இருக்கின்றன.</span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "a002_tamelango_abirami bold";"><br /></span>
<span style="font-family: "a002_tamelango_abirami bold";">இதில் வித்தியாசமான ஒரு விஷயம், ஒரு வேலையைச் செய்துகொண்டு இருக்கும்போது நீங்கள் கவனக்கூர்மையைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருந்தால் உங்கள் கவனம் சிதறவே வாய்ப்பு அதிகம். அதனால்தான், கவனச் சிதறலை ஏற்படுத்துகிற விஷயங்களைக் குறைப்பதன் மூலம் கவனக்கூர்மையை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.</span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "a002_tamelango_abirami bold";"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "a002_tamelango_abirami bold";">எவை எல்லாம் உங்கள் கவனத்தைச் சிதறடிக்கிறது என்று புரிந்துகொள்வதன் மூலமே அவற்றைத் தவிர்த்து, கவனக்கூர்மையை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.</span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "a002_tamelango_abirami bold";"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "a002_tamelango_abirami bold";">வேறு வேறு நேரங்களில் தூங்குவது, இஷ்டப்பட்டபோது உடற்பயிற்சி செய்வது, நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிடுவது போன்றவை கவனக்கூர்மைக்கு இடையூறு செய்யக்கூடியவை.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "a002_tamelango_abirami bold";"><b>கவனக்கூர்மையை வளப்படுத்திக்கொள்ள...</b></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "a002_tamelango_abirami bold";"> படிக்கும்போது கவனம் சிதறாமல் இருக்க, போதுமான வெளிச்சம், காற்றோட்டம், இரைச்சல் குறைவாக இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். </span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "a002_tamelango_abirami bold";"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "a002_tamelango_abirami bold";">காலையிலும் இரவிலும் படியுங்கள். ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் படிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். </span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "a002_tamelango_abirami bold";"><br /></span>
<span style="font-family: "a002_tamelango_abirami bold";">ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து படிக்காதீர்கள். படித்த விஷயத்தை மனதில் நிறுத்தும் திறனை அது குறைக்கும்.</span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "a002_tamelango_abirami bold";"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "a002_tamelango_abirami bold";">வாசிக்கத் தொடங்குவதற்கு முன்னால், எடுத்துக்கொண்ட பாடப் பகுதியைப் படித்து முடிக்க வேண்டிய நேரத்தை ஒரு தாளில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். ‘இன்றைக்குத் தமிழ்ப் பாடம் படிக்கப் போகிறேன்’ என்று மொட்டையாகத் தீர்மானித்துக்கொள்ளாதீர்கள். ‘இன்றைக்கு சமூக அறிவியலில் இரண்டு பாடங்கள், வேதியியலில் 10 கேள்விகளுக்கு விடை என்று குறிப்பாகத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். தெளிவான இலக்கு வேலையை முடிக்க உதவிகரமாக இருக்கும்.</span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "a002_tamelango_abirami bold";"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "a002_tamelango_abirami bold";">ஒவ்வொரு சமயமும் ஏதாவது ஒரு விஷயத்தில் கவனத்தைக் குவியுங்கள். டி.வி. பார்த்துக்கொண்டே படிப்பது உதவாது.</span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "a002_tamelango_abirami bold";"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "a002_tamelango_abirami bold";">உங்கள் சிந்தனைகள் வேறு எதிலாவது அலைபாய்ந்துகொண்டிருந்தால் படிப்பதைத் தள்ளிப்போடவும்.</span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "a002_tamelango_abirami bold";"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "a002_tamelango_abirami bold";">மனம் எதனாலாவது வருத்தமாக இருந்தாலும் படிப்பதைத் தவிர்க்கவும். தியானம், யோகா, எளிய சுவாசப் பயிற்சிகள் போன்றவை கவனக் குவிப்புக்கு உதவும். அடுத்தடுத்து ஒரே விதமான பாடங்களைப் படிப்பதைத் தவிர்க்கவும். அது எந்தப் பாடத்தில் என்ன விஷயம் வந்தது என்கிற குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். </span><br />
<span style="font-family: "a002_tamelango_abirami bold";"><br /></span>
<span style="font-family: "a002_tamelango_abirami bold";">தூக்கம் வரும்போதோ... களைப்பாக இருந்தாலோ... போர் அடித்தாலோ படிப்பதை நிறுத்திவிடுங்கள். நிறைய காபி, டீ குடிப்பது சுறுசுறுப்பைத் தருவதுபோன்ற தோற்றம் தந்தாலும் சிந்திக்கும் திறனைக் குறைக்கும் என்பதே உண்மை. இரும்புச் சத்தும் விட்டமின்களும்கொண்ட உணவுகளை உண்ணுங்கள். பகல் கனவு காண்பதைக் குறையுங்கள். எல்லோரும்தான் பகல் கனவு காகிறார்கள். ஆனால், அதிலேயே பொழுதை ஓட்டிவிட முடியுமா? </span><br />
<span style="font-family: "a002_tamelango_abirami bold";"><br /></span>
<span style="font-family: "a002_tamelango_abirami bold";">அப்படி சிந்தனைக் குதிரை கற்பனை உலகில் தறிகெட்டுப் பறந்துகொண்டு இருந்தால் எழுந்து ஒரு சிறிய நடை நடக்கலாம். கடைசியாக, பள்ளி சம்பந்தமான வேலைகளை ரசித்து அனுபவியுங்கள். படிப்பதில் உள்ள சுவாரசியத்துக்காகப் படியுங்கள். அது உங்களுக்கு எல்லாவற்றையும் கொண்டுவந்து சேர்க்கும்.</span></div>
</div>
ரமேஷ் வைத்யாhttp://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-625624242298356997.post-39366984089225757892016-03-25T21:42:00.002-07:002016-05-13T01:16:41.451-07:00சின்னாத்து மண்ணே என் பொன்னே<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சின்னாத்து மண்ணே எம் பொன்னே<br />
செருவாட்டுக் காசா என் ரோசா<br />
செலவாகிப் போகாதே செல்லம்மா செல்லம்மா<br />
செலவாகிப் போகாதே செல்லம்மா<br />
1.
மண்சரிஞ்சு பங்கப்பட்ட<br />
பந்தக்காலு பள்ளத்திலும்<br />
மஞ்சணத்திப் புல்துளிர்க்கும் மந்திரமாய்… (பத்திரமா<br />
நேந்துவச்ச உண்டிக்காச<br />
சாமியே திருடுமா<br />
காவல்நிக்கும் எல்லச்சாமி<br />
காலனா மருவுமா
சொல்லம்மா… நீ சொல்லம்மா<br />
செல்லம்மா ஏஞ் செல்லம்மா (ஏலேலம்மா/சின்னாத்து மண்ணே<br />
2.
பச்சைப்பல்லில் புன்சிரிக்கும்<br />
பட்டுப்போலப் புல்வெளியும்<br />
பச்சைப்பாம்பை வச்சிருக்கும்
கண்மறைவா<br />
கோடிஉசிர் செஞ்ச பாவி (சாமி)<br />
கோடிக்கும் உறவுதான்<br />
ஒண்ணிருக்கும் ஒண்ணுபோகும்<br />
நேர்ப்படும் கணக்குதான்<br />
துன்பமே இன்பம்தான்<br />
செல்லம்மா ஏஞ்செல்லம்மா (ஏலேலம்மா<br />
3.
நேத்திருந்தோம் வீட்டுக்குள்ளே<br />
காத்தடிச்ச வேகத்திலே<br />
சாஞ்சிருச்சு கூரையெல்லாம் சங்கடமா<br />
நீலவண்ணப் புள்ளிவானம்<br />
கூரையா ஜொலிக்குமே<br />
மேகவெள்ளைப் பஞ்சுக் கூட்டம்<br />
தோரணம் அசைக்குமே<br />
இல்லைகள் இல்லையே<br />
செல்லம்மா ஏஞ்செல்லம்மா<br />
4.
பொன்வண்டுக்கு வத்திப்பெட்டி<br />
உள்ளுக்குள்ள மெத்தைகட்டி<br />
வச்சிருந்தேன் பொத்திப்பொத்தி
பத்திரமா<br />
காலொசத்தி முட்டைபோடும்<br />
காட்சிதான் கிடைக்குமா<br />
நூலறுத்து தப்பியோடும்<br />
சூழ்ச்சிதான் நடக்குமா<br />
செல்லம்மா ஏஞ்செல்லம்மா<br />
5.
நள்ளிரவு விண்வெளியில்<br />
நட்சத்திரப் பந்தலைப் போல்<br />
பிள்ளையுந்தன் மென்சிரிப்பு (மென்னகைதான்)<br />
கொல்லுவதோ (கொல்லுதடி)<br />
காலையொளி பட்டதாலே<br />
மீனெல்லாம் உதிர்ந்ததோ<br />
வேளைவரும் அந்த ராவில்<br />
தோன்றவே மறைந்ததோ<br />
செல்லம்மா… செல்லம்மா
</div>
ரமேஷ் வைத்யாhttp://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-625624242298356997.post-14605721274717912712016-03-25T21:39:00.000-07:002016-05-13T01:20:52.790-07:00கபி கபி மேரே தில் மே<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
எப்போதும்என் மனதுள்ளே<br />
ஓர்எண்ணமே தோன்றும்<br />
நீஇந்த உலகில்<br />
வந்தாயோ என்னோடு சேர என<br />
நீமுந்தைய பிறப்பில்<br />
விண்மீனாய்மின் னியவளோ என்று<br />
உனைக் கொணர்ந்தார் மண்மேலே<br />
என்னோடு வாழ்கவென<br />
எப்போதும்என் மனதுள்ளே<br />
ஓர்எண்ணமே தோன்றும்<br />
உன் ஜோடி கை, உன் தோள்கள்<br />
என்றும் என் ஆஸ்தி என<br />
உன் நீண்ட கூந்தல் நிழல் போக்கும்<br />
எந்தன் வெய்யில்
உன் ஈர இதழ், கரங்கள்<br />
என் ஆஸ்தி என<br />
எப்போதும்என் மனதுள்ளே<br />
ஓர்எண்ணமே தோன்றும்<br />
நான் போகும் சாலையில்<br />
ஷெனாயின் பாடல் வந்தாற்போல்<br />
நம் சாந்தி ராத்திரி<br />
பூந்துகில் தொடாமலா போவேன்<br />
உள்ளங்கைக்குள்ளே தான்<br />
சுருங்காய் உன் வெட்கத்தாலே நீ<br />
எப்போதும்என் மனதுள்ளே<br />
ஓர்எண்ணமே தோன்றும்<br />
உன் ஆயுளெல்லாம் இதைப் போலே<br />
உன் அன்பு தாராய் நீ<br />
உன் நாட்கள் யாவும் இதே காதலின்<br />
பார்வை வீசாய்
முன் உன்னை அறியேன்<br />
உனக்கும் அதேதானே<br />
எப்போதும்என் மனதுள்ளே<br />
ஓர்எண்ணமே தோன்றும்</div>
ரமேஷ் வைத்யாhttp://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-625624242298356997.post-17917656728632761052016-03-25T21:23:00.001-07:002016-05-13T04:09:59.095-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
எரிமலையின் சிகரத்தில்<br />
பனி பெய்வதை<br />
கடற்கரை ஓரம்
நடக்கையில் பார்த்தேன்<br />
<br />
எங்கள் வீட்டுப்பக்கம்
புல்தரை இருக்கும்<br />
அங்கே
பவழமல்லி பொறுக்கப் போய்<br />
சந்தோஷமாகிவிட்டேன்,
பல நாட்கள் அங்கே இருந்ததைப் போல<br />
<br />
நேற்று மாலை அவளை<br />
மறுபடி சந்திப்பேனா<br />
நாளை பெய்த மழை
நேற்றும் பெய்யுமா<br />
<br />
வணிக வளாகத்தின் நீரூற்று நிற்கிறது<br />
அசைவது நினைவு<br />
<br />
நனைந்த உடைபோல்<br />
நெருக்கமாயிருக்கிறேன்
அவளோடு<br />
<br />
நினைவில்
நிலவின் கிரணத் துளி<br />
பறவைகளின் வாயைக்
கட்டிப்போட்டிருக்கிறது<br />
சிள்வண்டு இசைக்கிறது<br />
<br />
வானுக்கு வெளியே வழியும்
நிலவுக் கதிர்<br />
கடலை உப்பளமாக்கிவிட்டது<br />
<br />
பண்டிகைக்கு ஏற்றப்பட்டிருக்கிறது சரவிளக்கு<br />
தொலைபேசியின் பாட்டொலி குறுகுகிறது<br />
என் ஆறுதல் ஏறிய வாகனம்<br />
தென்கிழக்கில் நகர்ந்துபோகிறது<br />
<br />
வருத்தத்தின் பல பாதைகளில்
நிலா ஒளிர்கிறது<br />
வெக்கையில் இருப்பது நான் மட்டுமல்ல<br />
<br />
என் தனித்த தூக்கத்துக்குள்<br />
மயில் நீட்டுகிறது<br />
தன் களைத்த,<br />
கண்கள் வைத்த தோகையை<br />
<br />
மொட்டை மலையில்<br />
காற்றின் இரைச்சலில்<br />
இங்கே இல்லாதவள்<br />
இங்கே இருக்கிறாள்
</div>
ரமேஷ் வைத்யாhttp://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-625624242298356997.post-4549150453399848752016-03-25T21:22:00.001-07:002016-06-01T04:19:19.049-07:00பாட்டு வைத்தியர்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
தேசியத்து முற்போக்கு<br />
தேரடியில் நிக்குது<br />
ஜோசியத்தை நம்பிக்கிட்டு<br />
ஜோக்கராக மாறுது<br />
சுட்டுவிரல் முடிவெடுக்கும்<br />
சட்டசபைத் தேர்தலில்<br />
கட்டைவிரல் ஜோசியமா<br />
காப்பாத்தப் போகுது?
</div>
ரமேஷ் வைத்யாhttp://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-625624242298356997.post-30175244592823742442016-03-25T21:21:00.000-07:002016-03-25T21:21:05.758-07:00நீங்கள் கனவு கண்டிருக்கிறீர்களா? <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
“பல முறை வித்தியாசமான கனவெல்லாம் கண்டிருக்கிறோம்” என்றும் சொல்கிறீர்கள், அல்லவா?
ஓர் இரவுத் தூக்கத்தில் சிலர் ஆறு முறைகூட கனவு காண்பதுண்டு. அந்த ஆறில் ஒண்ணோ ரெண்டோ அவர் யோசித்தே இராத சம்பவங்களைக் கொண்டதாகவும் இருக்கலாம்.
கனவு எங்கே இருந்து உருவாகிறது?
நம்முடைய நினைவுகள், உணர்ச்சிகள், யோசனைகள் போன்றவை, நம் மூளையின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் பதிந்திருக்கும். அந்தப் பகுதியில் இருந்துதான் கனவு உருவாகிறது. இரவு நேரத்தில், உங்கள் மனதில் பதிந்திருக்கும் விஷயங்களையும், நீங்கள் தூங்கப் போகும் முன்பு என்ன யோசித்தீர்களோ அதையும் உங்கள் மூளை போட்டுக் கலக்குகிறது. குலுக்குகிறது. அதுவே கனவு.
கனவில் வந்தது நிஜத்தில் நடக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், அந்த சமயத்தில் நம் வாழ்வில் என்ன நடந்துகொண்டு இருக்கிறதோ அதைப் பற்றிய குறிப்புகள் இருக்கக்கூடும்.
‘நமது உள்மன உணர்வுகளைத் தெரிந்துகொள்ள கனவுகள் நமக்கு உதவுகின்றன’ என்று கனவுகளை ஆராய்ச்சி செய்பவர்கள் கூறுகிறார்கள்.
“கனவுகளின் மூலம் நம்முடைய பிரச்னைகள் சிலவற்றை நாம் தெளிவுபடுத்திக்கொள்ளக்கூட முடியும்” என்றும் சேர்த்துக்கொள்கிறார்கள்.
பல கனவுகள், அர்த்தமுள்ள - பொதுவான மையக் கருத்துகளை உள்ளடக்கியிருக்கின்றன என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இங்கே அவற்றில் சில விதக் கனவுகளைப் பற்றிப் பார்க்கலாம். அவை உங்களைப் பற்றியும் உங்கள் வாழ்வில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் பற்றியும் சொல்லக்கூடும்.
கனவின் கருத்து: யாரோ துரத்துவது போல
அதன் பொருள்: ஏதோ ஒரு பயங்கரமான உயிர் உங்களைத் துரத்துவது போலக் கனவு வரும். இதற்கு, நிஜ வாழ்வில் உங்களுக்கு வந்திருக்கும் பிரச்னை ஒன்றை நீங்கள் சந்திக்காமல் ‘அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்’ என்று தவிர்ப்பதைக் குறிக்கும்.
க.க. : பறப்பது போல…
பொருள்: நிஜ வாழ்க்கையில் நீங்கள் ஏதோ சிறப்புப் பெறப் போகிறீர்கள். உங்கள் நண்பர்கள் உங்களை லீடர் போலப் பார்க்கலாம். பெற்றோர் உங்களுக்கு அதிக சுதந்திரம் கொடுக்கலாம்.
க.க. : காணாமல் போய்விடுவது போல…
பொருள்: ஏதோ ஒன்றைப் பற்றி முடிவு எடுக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறீர்களா? தவறான முடிவை எடுத்துவிடுவோம் என்று இப்போது பயப்படுகிறீர்கள். இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க, உங்கள் முன் இருக்கும் சாத்தியக் கூறுகளை ஒன்றுக்கு இரண்டு முறை அலசி ஆராயுங்கள்.
க.க. : கீழே விழுவது போல…
பொருள்: நீங்கள் நிறைய வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டிருக்கிறீர்கள். கொஞ்சம் நிதானம் ஆகி, உங்களை எது அழுத்தத்துக்கு ஆளாக்குகிறது என்று யோசிக்க வேண்டிய நேரம் இது. கனவில் கீழே விழும்போது மெதுவாக அடிபடாமல் விழுந்தீர்களா? உங்கள் கடினமான கால கட்டத்தை சீக்கிரமே தாண்டிவிடுவீர்கள் என்று புரிந்துகொள்ளுங்கள்.
க.க. : அசைய முடியாதது போல…
பொருள்: ஏதோ பிரச்னையில் மாட்டிக்கொண்டிருக்கிறீர்கள். இந்தப் பிரச்னை எப்படி வந்தது, வருங்காலத்தில் இது போன்ற சந்தர்ப்பத்தில் புத்திசாலித்தனமாக முடிவெடுப்பது எப்படி என்று யோசியுங்கள்.
க.க. : எதையோ காணாமல் போட்டுவிடுவது போல…
பொருள்: உங்கள் தன்னம்பிக்கை கொஞ்சம் தளர்ந்திருக்கிறது. ஏதேனும் புது விளையாட்டிலோ, புதிய பொழுதுபோகிலோ நீங்கள் ஈடுபட விரும்பலாம். ஆனால், அதில் வெற்றிகரமாகச் செயல்பட முடியாதோ என்று உங்களுக்குத் தோன்றலாம். தன்னம்பிக்கைக் குறைவு! அந்த நம்பிக்கை உங்களுக்கு உள்ளேயேதான் இருக்கிறது. தேடிப் பாருங்கள், கண்டுபிடித்துவிடுவீர்கள்!
க.க. : ஏதோ ஒரு விஷயத்துக்கு (பரீட்சைக்கோ பயணத்துக்கோ…) உங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளாதது போல, அல்லது தாமதமாகிவிடுவது போல…
பொருள்: சீக்கிரம் உங்களுக்கு வரவிருக்கும் ஒரு வேலை, அல்லது நீங்கள் பங்குகொள்ள வேண்டிய ஒரு நிகழ்ச்சி பற்றி நீங்கள் கவலையோடு இருக்கிறீர்கள். அதற்கு நீங்கள் ஏற்கெனவே நல்ல முறையில் தயார் செய்திருந்தால், உங்களுக்கு இப்போது பதற்றமாக இருக்கிறது என்று அர்த்தம். இது சாதாரணமானதுதான். நல்ல முறையில் தயார் செய்யவில்லை என்றால் இந்தக் கனவை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளுங்கள். தயார் செய்யுங்கள்.
One liners
ஒரு கனவு 10 நிமிடம் முதல் 40 நிமிடம் வரை நீடிக்கும்.
நீங்கள் விழித்திருக்கும்போது இருப்பதை விட, கனவு காணும்போது மூளை அதிக சுறுசுறுப்போடு வேலை செய்கிறது.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கனவு காணும் நேரம் மொத்தத்தையும் கணக்கிட்டால், சுமார் ஆறு வருட காலம் வரும்.
ரமேஷ் வைத்யாhttp://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-625624242298356997.post-31073733797580264632016-03-25T21:19:00.003-07:002016-03-25T21:19:46.332-07:00ஆப்பிள்னா என்ன?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
‘ஆப்பிள்’ என்றால் ஆப்பிள் இல்லை!
‘ஆப்பிள்’ என்றதும் உங்களுக்கு மொபைல் போனோ, மேக் (Mac) கணினியோ ஞாபகம் வந்திருக்குமே…
இந்த ஆப்பிளை அறிமுகப்படுத்தி, உலகில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்திய ஸ்டீவ் ஜாப்ஸ்-க்கு முன்பிருந்தே, வேறு இரு ஆப்பிள்கள் பிரபலமாக இருக்கின்றன.
உலகம் தோன்றுவதற்கே ஏவால் தின்ற ஆப்பிள்தான் காரணம் என்று ஒரு கதை உண்டு. அது முதல் ஆப்பிள்.
அறிவியல் உலகில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியது, ஐஸக் நியூட்டனின் ஆப்பிள்! மரத்தில் இருந்து ஆப்பிள் கீழே விழுவதைப் பார்த்து, ‘புவி ஈர்ப்பு விசை’ என்பதை உலகத்துக்கு நிரூபித்தார் அந்த விஞ்ஞானி.
இதை எல்லாம் யோசிக்கும்போது ஆப்பிள் என்கிற பழத்தின் சுவாரசியம் நமக்குத் தெரிகிறது.
அது ஒரு பக்கம் இருக்க, ஆங்கிலத்தில் ‘Apple’ என்பது பழத்தைக் குறிப்பதோடு, வேறு எதை எதையோ குறிப்பிடும். கவனித்திருக்கிறீர்களா?
Idiom என்று சொல்லப்படும் மரபுத் தொடர்களில் ஆப்பிள் என்கிற சொல் பல வேறு அர்த்தங்களைத் தருகிறது.
ஒரு கூட்டத்தில் எல்லோரும் நல்லவர்களாக இருக்க, ஒருவர் மட்டும் மோசமானவராக இருந்தால், அவரை ‘rotten apple’ என்பது வழக்கம்.
அதே பலரில், ஒருவரை மட்டும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றால் அவரை ‘you are the apple of my eyeசs’ என்று சொல்வேன். அப்படியே எதிர்ப்பதம் ஆகிறது, பாருங்கள்!
‘பட்டிக்காட்டு ஆள்’ என்பதைக் கூட, ‘apple knocker’ என்று ஆங்கிலேயர்கள் கிண்டல் கலந்து கூப்பிடுவார்கள்.
தொடர்பே இல்லாத இரண்டு விஷயங்களைக் குறிப்பிட, ஆப்பிளைத் தொடர்பு படுத்தி ஒரு சொற்றொடர் உண்டு. Apples and oranges என்பதுதான் அது. அதாவது, டேவிட்டையும் பீட்டரையும் ஒப்பிடவே முடியாது, ஏனென்றால் அவர்கள் ஆப்பிளும் ஆரஞ்சும் போல (like apples and oranges) என்று குறிப்பிடுவார்கள்..
இரண்டு ஆப்பிள்கள் தொடர்பு இல்லாமல் உருண்டு கிடப்பது கூட ஓ.கே. ஆனால், சதுர ஆப்பிள் என்பதுதான் இடிக்கிறது. விதிமுறைகளுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடப்பவரை square apple என்கிறார்கள்.
அதேபோல பொருட்களை எல்லாம் அதிகபட்சமாக ஒழுங்காக, சுத்தமாக வைத்திருப்பதற்கு ‘apple – pie - order’ என்று பெயர்.
ஒழுங்காகவும் இல்லாமல், வேலைகளை நியதிப்படி செய்யாமல் இருப்பவர், வேலை சொன்னவருக்கு ஜால்ரா அடிக்க வேண்டியிருக்கும்! இப்படி, தேவையில்லாமல் புகழ்ந்து பேசுவதை, ‘polish the apple’ என்கிறார்கள். (தமிழில் இதை சோப்புப் போடுவது என்று சொல்லும் வழக்கம் உண்டு.)
ஒரு செய்கைக்கு இப்படி ஒரு பெயர் என்றால், ஒரு நகருக்கே ஆப்பிள் என்று பெயர் உண்டு. ஆம், நியூயார்க் நகரத்தை ‘Big apple’ என்பார்கள்.
அதே நேரம், “அங்கே ‘Road apple’ கிடக்கு” என்று யாராவது சொன்னால், குனிந்து பழத்தைத் தேட வேண்டாம். ரோடு ஆப்பிள் என்றால், குதிரைச் சாணி!
ரமேஷ் வைத்யாhttp://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-625624242298356997.post-5078318237681959732016-03-19T02:16:00.000-07:002016-06-01T04:21:26.097-07:00அகநாழிகை மாமா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அகநாழிகை மாமா<br />
<br />
அழகு மிகுந்த மாமா<br />
அகநாழிகை மாமா<br />
அறிவு நிறைந்த மாமா<br />
அவரைப் பாடுவோமா..?<br />
<br />
வக்கீல் கோட்டு மாட்டி<br />
வாது மன்றம் செல்லுவார்<br />
வார்த்தைகளை நீட்டி<br />
வழக்குகளில் வெல்லுவார்<br />
<br />
எத்தனையோ பாட்டிலே<br />
ஏழு ஸ்வரம் காட்டுவார்<br />
ஏரி காத்த ராமரை<br />
இடத்தை விட்டு ஓட்டுவார்<br />
<br />
ஏசுநாதர் என்றைக்கோ<br />
எருசலேமைச் சுற்றினார்<br />
வாசுதேவன் அப்பப்போ<br />
வாய்த்த மலையில் சுற்றுவார்<br />
<br />
பாங்காய்க் கவிதை எழுதுவார்<br />
பதிப்பகமும் நடத்துவார்<br />
போங்காய்ப் பேசும் மனிதரை<br />
போட்டுப் பார்த்து மகிழுவார்<br />
<br />
பாங்காக் சென்ற மாமா<br />
என்ன செய்தார் தெரியுமா?<br />
அதனை நானும் கூறினால்<br />
அடிக்க ஓடி வருகுவீர்..!
-<br />
<br />
கொழந்தைக் கவிஞர் ரமேஷ் வைத்யா</div>
ரமேஷ் வைத்யாhttp://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-625624242298356997.post-30056202368219989182010-09-29T02:34:00.000-07:002010-09-29T03:20:20.305-07:00ஐயடிகள் காடவர்கோன் - 3நூல் சிறந்த பண்டிதர்கள் நிறைந்த காஞ்சியம்பதியை ஒட்டி வாழ்ந்து வந்தவர்கள் காடவ ஆதிகுடிகள். அந்தச் சிற்றரசின் ராஜ்யபாரம் சுமந்துவந்த மன்னர் கள்ளியங்கோட் பெருமானாருக்கு ஒரே வாரிசு.. அந்தப் பிள்ளைக்கு இளம்பிள்ளை வாதம். கவலையோடே அரசாண்டார் மன்னர். ராஜ்யத்தின் எல்லைப் பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக அபகரணம் ஆயின. மன்னருக்கும் வயோதிகம் வந்துற்றது. பல காலமாக தளபதி பெருமாறனை அவதானித்து வந்தார் மன்னர். சகல கார்யங்களிலும் தீரனாகவும் ஒழுக்கத்தில் சீலனாகவும் இருந்தான் அவன். ஐப்பசி மாசம் மூல நட்சத்திரத்தில் பிறந்த ராஜ ஜாதகம் அவனுடையது. <br /><br /> மந்திரிப் பிரதானிகளின் ஆலோசனையின் பேரில் ராஜ்யத்தையும் இளம்பிள்ளைவாத இளம்பிள்ளையையும் பெருமாறனின் கைகளிலும், இடுப்பிலும் ஒரு சுப நாழிகையில் ஒப்படைத்தார்.<br /><br /> காடவர்களின் கோன் ஆன பெருமாறன் செவ்வனே சீர்திருத்தங்களைத் தொடங்கினான். அபகரிக்கப்பட்ட எல்லைகளை விஸ்தீரணம் செய்ததோடு, அடுத்த நாடுகளின் மீது படைகொண்டு ராஜ்யத்தை சாம்ராஜ்யம் ஆக்கினான். வெகுளம்பாடி, வேட்டியூர், தூசி பட்டணம், தொண்டலூர் சாவடி, கழுக்குன்றூர், மதுராசனூர் என அவன் ஜெயங்கொண்ட ராஜ்யங்களின் பட்டியல் மாளாது நீளும்.<br /><br /> இப்படியான பராக்கிரமன், தன் ஜனன முகூர்த்தத்திலேயே மெய்க்காப்பாளன் ஒருவனால் குத்திக் கொல்லப்பட்டான். சிவலோகப் பிராப்தி அடைந்த அவனது ஜென்ம தினம் அப்படியே கொண்டாடப்படாமல் காடவர்கள் கூடி மூன்று நாள் திருவிழாவாகவும் மூன்று நாள் துக்கமாகவும் நீண்ட காலம் அநுசரிக்கப்பட்டது.<br /><br /> இன்றும் அந்தக் காடவ மன்னனின் வாரிசுகள் அந்தப் பகுதியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.<br /><br /> *<br /><br /> இதுதான் அந்தப் பெரியவர் கொடுத்த நைந்த புத்தகத்தில் இருந்த விவரங்களின் சாரம்.<br /><br /> என் குழப்பம் அதிகரித்தது. கம்பெனிக்கு ஒரு வாரம் மெடிக்கல் லீவ் போட்டேன். வெட்ட வரும் எதிரியும், திட்ட வரும் புலவருமாகக் கனவுகள் அலைக்கழித்தன. வயிற்றில் குபீர் - வாரத்துக்கு ரெண்டு பீர் என்றிருந்தது நாளைக்கு ரெண்டு பெக் என்று ஆயிற்று. நிர்மலா ஏகத்துக்கும் கோபப்பட்டு எந்நேரமும் திட்டித் திரிந்தாள்.<br /><br /> ''இதோ பாருங்க, என்ன பிரச்னைன்னும் சொல்ல மாட்டேங்கறீங்க. கம்பெனிக்கும் போகாம வீட்டுலயே உக்கார்ந்து மோட்டுலயே பாத்துட்டிருக்கீங்க. புறப்பட்டு வாங்க என்கூட'' என்று சாலிகிராமத்துக்குக் கூட்டிப் போனாள்.<br /><br /> 'ஆதிநாக சுவடி ஜோதிட நிலையம்.'<br /><br /> சில மனநல மருத்துவர்களைப் பார்த்தாலே நோயின் வேகம் அதிகரிக்குமே அதுபோல இருந்தார் சுவடி ஜோதிடர். ''யாருக்குப் பார்க்கணும்?'' என்றார். அதுவே தெரியாதவர் மூன்று காலத்தையும் சொல்லப்போகிறார்.<br /><br /> என் முகத்தைப் பார்த்தார். மணியைப் பார்த்தார். பெயரைக் கேட்டார். உட்காரச் சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார்.<br /><br /> கொஞ்ச நேரம் கழித்து வெளிவந்த ஜோதிடரின் கையில் இருந்த சுவடியில் என்ன இருக்கிறது என்று எட்டிப் பார்த்தேன். ஒன்றும் தெரியவில்லை. 'ம்க்குக்கூம்' என்று செருமி முறைத்தார்.<br /><br /> ஒன்றுமில்லாத சுவடியைப் பார்த்துப் படிக்க ஆரம்பித்தார்.<br /> <br /> ''மூநயன பிரமாண்டன் அடியவனென நாமம்.<br /> வானயன் அனுப்பினான் அவனிடமே திரும்பிடுவான்<br /> பத்துக்கு ஈரதிக மைந்து குறை மாதம்<br /> பத்தொன் பதாம் வெள்ளி மூலம்'<br /> <br /> என்று தொடங்கி நீளமாக வாசித்துக்கொண்டே போனார். சின்னச் சுவடியில் எவ்வளவு விஷயம்... அவ்வப்போது அவர் முகம் மாறியது. அவர் முடித்ததும் ''இவ்வளவு நேரம் நீங்க படிச்ச்சதில மையக் கருத்தை விளக்கிச் சொல்லுங்க" என்றேன்.<br /> <br /> ''ஐப்பசி மாச மூலநட்சத்திரத்துல பிறந்த ஜாதகர். ரெண்டு எல்லைதான் ஒண்ணு, ராஜா அல்லது வீதிவலம்தான். தட்டச்சநல்லூர் ருத்ரசோமசுந்தரர் கோயில்ல பரிகாரம் செய்யணும்'' என்றவர் நிர்மலாவைப் பார்த்துத் திரும்பி, ''நாளைக்கே அதைச் செஞ்சாகணும். என்னை வேற ஒண்ணும் கேட்காதீங்க'' என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார்.<br /><br /> *<br /><br /> அந்தக் கோயில் பாழடைந்து பார்க்கவே பயமாக இருந்தது. சுவடி ஜோதிடர் சொன்ன விஷயங்களை பூசாரியிடம் சொல்லி, எலுமிச்சம்பழம், நெய், திரி, தேங்காய், கீங்காய் என்று ஒவ்வொன்றாக எடுத்து வெளியே பயம் சார்ந்த திகிலுடன் வைத்தாள் நிர்மலா. அர்ச்சகர் அல்ட்டிக்கறாப்ல இல்லை. அவருக்கு இதெல்லாம் வாடிக்கை போலிருக்கிறது. தணிந்த குரலில், காசுபோட்ட ஜுக்பாக்ஸ்போல - அல்லது கிடைக்கப்போற காசுக்காக, ஏதோ சொல்லி பூஜை செய்ய ஆரம்பித்தார்.<br /><br /> எனக்கு என்ன ஆச்சர்யமென்றால்.... அந்தக் கோவில், அந்த பிரதேசம்.... யாவுமே எல்லாமே எனக்கு ஓரளவு தெரிந்தாப் போலிருந்தது. நேராப் போயி வலப்புறம் திரும்பினால் ஸ்வாமிவாகனங்கள் நிறுத்தி யிருப் - யிருந்தார்கள்! கால் சூம்பிய ராட்சஸனாய்த் தேர் வாசலில் நின்றிருக் - ருந்தது!<br /><br /> டிரில் மாஸ்டர் போல கோயிலை ஆறு முறை சுற்றிவரச் சொன்னார். மூன்றாவது முறையே எனக்குத் தலை சு.... சமாளித்துக்கொண்டு சுற் - தலைசுற்றினேன். சுற்றினேன் தலை.<br /><br /> கடைசி சுற்றில் தத் - தடுமாறி அங்கே இருந்த ஒரு சின்ன சிலையைப் பிடித் - கோயிலுக்குள் மனித சிலை! இந்த மனுசனை எங்கேயோ நிச்சமாய்ப் பார்த்திருக்கிறேன்! - கீழே ஏதோ செதுக் - 'ஐயடிகள்' - கியிருந்தது .. என் மொத்த ரத்தமும் தலைக்கு ஏறியது.<br /><br /> ''ஐயடிகள் ஸ்வாமியைப் பார்க்கறீங்களா? இங்கேயே சமாதியான பெரிய்ய மகான். இவரைப் பத்தி கதை கதையாச் சொல்வாங்க. ஒவ்வொரு சிவன் கோயிலாப் போயி பாட்டுப் பாடி சாமி கும்பிடுவாராம். பிச்சை எடுத்துச் சாப்பிடுவாராம். இந்த ஊர்லேயே பெரிய பணக்காரரா இருந்தவரோட மகளுக்குப் பிடிச்சிருந்த பைத்தியத்தைப் பாட்டுப் பாடியே குணப்படுத்திட்டாராம். (சிலாள் பாட்டுப் பாடினா பைத்தியம் பிடிக்கும்) - அவர் குடுத்த தங்கக் காசுகளை ஐயடிகள் தொட்டதும் அது தண்ணியா மாறி பூமியில பரவிடுச்சாம். இந்த சுவர்ல இருக்கறதெல்லாம் இவர் பாடின பாட்டுதான்'' என்றார் பூசாரி.<br /><br /> படித்துப் பார்த்தேன். புரியாத தமிழ். பாட்டின் தாள லயம் மனதை என்னமோ செய்தது.<br /><br /> புறப்பட்டு வந்தோம்.<br /><br /> இரவு ஒன்பது மணி இருக்கும். மழை தூறிக்கொண்டிருந்தது. ''நீ ஆட்டோ பிடிச்சுப் போயிடு. நான் வண்டி எடுத்துட்டு வர்றேன்'' என்று நிர்மலாவை அனுப்பிவைத்தேன்.<br /><br /> வழியில் டாஸ்மாக் ஜெகஜோதியாக இருந்தது. ஒரு பெக் சாப்பிட்ட நேரத்தில் தூறல் விட்டிருந்தது. எனக்கு தங்கக்காசு தந்தால் நானுங்கூட இதோ தண்ணியா மாத்திக் காட்டுறேன்! - மீதியைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு சிக்கன் வறுவல் பார்சலோடு புறப்பட்டேன்.<br /><br /> கும்மிருட்டு. ஹெட்லைட் பேருக்கு எரிந்தது. மூளையின் இறுக்கங்களை நெகிழ்த்தி யோசனை மூட்டை கிழிந்து கொட்டுவது போன்ற போதை. அல்குல் அது இதுவென்று சங்ககாலக் கெட்ட வார்த்தைகள் மனசுக்குள் வட்டமடித்தன...<br /><br /> வீட்டுக்குள் நுழைந்ததுமே வாசனை பிடித்துவிட்ட நிர்மலா, ''என்னங்க இது அமாவாசையும் அதுவுமா அசைவம் வாங்கிட்டு வந்திருக்கீங்க? கோயிலுக்கு வேற போயிட்டு வந்திருக்கோம்...'' என்று முணுமுணுக்கத் தொடங்கினாள். '<br /><br /> என் மூளையில் பாம்பு கொத்தியது. ''என்ன சொன்னே, அமாவாசையா..?'' ஏறக்குறைய கத்தினேன். ''இது எந்தத் தமிழ் மாசம்?''<br /><br /> ''ஐப்பசி, அட மறந்தே போயிட்டோமே இன்னிக்கு உங்க பிறந்த நட்சத்திரமாச்சே...'' என்றாள் நிர்மலா. பிரமை பிடித்து நின்றேன்.<br /><br /> ''என்னங்க... என்ன ஆச்சு?''<br /><br /> கோயில் சுவரில் பார்த்த ஒரு பாட்டு நெற்றிப் பொட்டைக் கிழித்துக்கொண்டு நினைவுக்குள் வந்தது.<br /> 'இரண்டாம், இருபூஜ்யம் பத்தாம் ஒருவருடம்<br /> திரண்டே தெருவெங்கும் நீரோட - இருண்ட<br /> தினமதில் மூன்றாம் முறைகூடு விட்டு<br /> சிவமதைச் சேர்தல் கடன்'.<br /> <br /> பாட்டில் சொல்லியிருப்பது 2010 மழைக்கால அமாவாசை நாளா..?<br /> <br /> அந்த நாடி ஜோசியன், அவன்கூட, இதுமாதிரி, பயத்துடன் ஏதோ சொன்னானே!<br /><br /> உடல் அதிர்ந்து அடங்கியது. பாக்கெட்டில் இருந்த பாட்டிலை எடுத்து அப்படியே வாயில் கவிழ்ந்த்துக்கொண்டேன். அப்புறம் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது.ரமேஷ் வைத்யாhttp://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-625624242298356997.post-27288087837804159272010-09-28T02:18:00.000-07:002010-09-28T02:18:00.370-07:00ஐயடிகள் காடவர்கோன் 2 <a href="http://rameshgvaidya.blogspot.com/">முதல் பகுதி</a><br /><br /><br /><br /> அதில் ஒரு வார்த்தையும் புரியவில்லை. மறுபடி மனம் முழுக்க குழப்பம் சூழ்ந்தது. பொங்கு போதையும் தலை சுற்றலுமாகக் கிளம்பி வீட்டுக்குப் போய்விட்டேன்.<br /> <br /> *<br /><br /> காலையானால் எஃப்எம் வைத்துவிடுகிறாள் நிர்மலா. ரேடியோவை அணைத்தால் அவள் சமையலில் நிதானம் தவறி மளிகைப் பட்டியலில் உப்புச் செலவு ஜாஸ்தியாகிவிடும் என்பதால் எதையும் காதில் போட்டுக்கொள்வதில்லை நான். ''சாயந்திரம் வரும்போது ---- வாங்கிட்டு வாங்க'' என்று நிர்மலா சொல்வதையும்.<br /> <br /> மனுஷன் பரபரப்பாகக் கிளம்பிக்கொண்டு இருக்கும்போது, ''நான் ஒரு கவிதை சொல்றேன், மேகம் வடிக்கும் உப்பிள்ளாத கன்னீர்தான் மளை. எப்பிடி இருக்கு?''<br /><br /> ''ஹைய்யோ, ஸூப்பர்பா ஸொன்னீங்க. இது நீங்கலே எலுதினதா... இதோ உங்க பாட்டு'' என்பதில் எரிச்சலடைந்து ரேடியோவை அணைத்தேன். நாம் சொல்வதைக் கேட்பதற்காக ரேடியோ கிடையாது.<br /> <br /> அது ஸ்டேஷன் மாறி ரெயின்பே எஃப்எம்முக்குப் போனது. ''காடவர்கோன் என்பது சரியான விடை. கஷ்டமான கேள்விக்கு ரொம்பச் சரியா பதில் சொல்லிட்டீங்க. பாராட்டுக்கள்'' என்று தொகுப்பாளர் பரபரப்பான குரலில் கத்தியதும் மாள, என திகைத்துப் போனேன்.<br /> <br /><br /> எப்படித்தான் ஆஃபீஸுக்கு போன் போட்டேனோ, எப்படித்தான் பெர்மிஷன் கேட்டேனோ...<br /><br /> அடுத்த முக்கால் மணி நேரத்தில் ரெயின்பே ரேடியோவில் இருந்தேன். சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியின் தயாரிப்பாளரைச் சந்திக்க வேண்டும் என்பதை செக்யூரிட்டிக்குப் புரிய வைக்க இருபது நிமிடம் பிடித்தது. தயாரிப்பாளரைப் பார்த்து, நான் கேட்பது ராணுவ ரகசியத்தை அல்ல, என்று உணர்த்தி அவரது திகிலைக் குறைக்கவேண்டி இருந்தது. எல்லா விவரங்களையும் தெளிவாக விசாரித்துத் தெரிந்துகொண்டார் தயாரிப்பாளர்,<br /><br /> ''நேயர்களோட அட்ரஸ் எங்களுக்கு எப்படிங்க தெரியும்? அவங்க போன் போட்டுப் பேசுவாங்க. அவங்களுக்குப் பரிசா ஒரு பாட்டுப் போடுவோம்...''<br /><br /> ''காலர் ஐ.டியில நம்பர் இருக்காதா..?''<br /><br /> அவர் சிரித்தார். ''ஒரு நாளைக்கு எத்தனை நேயர்கள் பேசுறாங்கன்னு லிஸ்ட் தரட்டுங்களா?'' என்றார்.<br /><br /> சோர்ந்து திரும்பியவன், திடீரென்று திரும்பி அவரை நோக்கி ஓடினேன்.<br /><br /> நாற்காலியில் இருந்து எழுந்துவிட்ட அவர், என்ன என்பதுபோல் பார்த்தார்.<br /><br /> ''சார், அந்தப் பதிலுக்கான கேள்வி என்னன்னு சொல்லுங்க'' என்றேன். கண்டேன்... நல்வார்த்தை நற்றமிழில் நவிலுக நாயே! என் இதயத் துடிப்பின் சத்தம் அந்த அறையில் ஓடிக்கொண்டு இருந்த ஃபேனின் சத்தத்தைவிட அதிகமாக இருந்தது.<br /><br /> அவர் மேஜை மணியை அடித்தது, அட்டெண்டென்ட் வந்தது, இவர் வேறு யாரையோ அழைத்து வரச் சொன்னது, அவர் வந்தது எல்லாமே ஸ்லோ மோஷனில் ந ட ந் த து. எனக்கு மூளைக்குள்ளே நரம்பு துடித்தது.<br /><br /> ''காடவர்களுக்குத் தலைமை தாங்கி, ராஜ்யத்தை விஸ்தரித்த தென்னிந்திய மன்னன் யார்?' இதுதான் சார் அந்தக் கேள்வி.''<br /><br /> அவரே அவசரமாக ''அது நான் எப்பவோ, எங்கேயோ படிச்ச தகவல் சார். ஞாபகத்திலிருந்து எழுதினேன், ஏதாவது தப்புங்களா..?''<br /><br /> அவர் கவலை அவருக்கு. சரியாகவும் இருக்கலாம்... எனக்கே தெரியவில்லையே. அடியேனின் அவஸ்தையை அறியாத அற்பர்கள்..!<br /><br /> பிதுக்கிக் குடிக்கப்பட்ட பிளாஸ்டிக் பாக்கெட்டாய் வெளியே என்னையே வீசிக்கொண்டேன்.<br /><br /> ஆஃபீஸ் போகப் பிடிக்கவில்லை. முதன்முதலாக தலை வலிக்கிற உண்மையைச் சொல்லி லீவு போட்டேன். என் ராஜ நடை தொய்ந்திருந்தது. வண்டியை உதைத்து வீட்டுப்பக்கம் திருப்பினேன்.<br /><br /> வெறுமனே தூங்க முடியாது.... நிர்மலா, கோயம்பேட்டுக்குப் போயிருப்பாள் போலும். நல்லதாப் போச்சு. ஃப்ரிட்ஜில் வார இறுதிக்கான பீர் ரெண்டு பாட்டில் இருந்தது. வெயிலுக்கு இதமாக ஜில்லென்று நெஞ்சாங்கூட்டில் இறங்கியது. பாட்டில்களில் வெறும் தண்ணீரை ஊற்றி மூடியை வைத்து அழுத்திவிட்டு கட்டிலில் சாய்ந்தேன்.<br /><br /> இந்த ஐயடிகள் காடவர்கோன் யார்? ஏன் என்னை இப்படித் துரத்துகிறான்? எனக்குப் பைத்தியம் பிடித்துக்கொண்டு இருக்கிறதா? மூளையைப் பிறாண்டிக்கொண்டுதான் சாகப் போகிறேனா? என் பிராவிடென்ட் ஃபண்ட், இன்ஷ்யூரன்ஸை எல்லாம் நிர்மலா ஒழுங்காக வாங்கிவிடுவாளா?<br /><br /> நிர்மலா, எனக்கப்புறம் இன்னொரு கல்யாணம் செய்துகொள்வாயா? வேணாம் பிளீஸ். அவனாவது நிம்மதியாக வாழட்டுமே நிர்மலா...<br /><br /> நான் ஒருவேளை காடவர்கோனின் மறுபிறவியா? மண்ணாங்கட்டி! ஒரு பிறவியே பிரச்னையாக இருக்கிறது...<br /><br /> மனச் சுவரில் பலவிதமான சித்திரங்கள் சிதிலமாகத் தோன்றி மறைந்தபடி இருக்கின்றன.<br /><br /> அட! அதென்ன? நான் ஒரு சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறேன். எனக்கு மன்னர் உடை பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஒரு புலவர் எழுந்தார்.<br /> <br /> ''கொன்றையந் தார்சூடி கொடுங்களம் போராடி<br /> கன்றிளம் காளையாய் கடும்பகை வேரோடு<br /> கொன்றுஎம் துயர்தீர்க்க திசையெலாம் சூழ<br /> வென்றவன் என்றுமே வாழ்க வாழ்க!'<br /><br /> அட, நமக்கு இவ்வளவு பெருமையா? ''யாரங்கே, புலவருக்கு ஒரு ஃபிப்டி ருபீஸ் பழைய நோட்டு கொடுங்கள்.'' ..<br /><br /> அடுத்து ஒரு புலவர் எழுந்தார். இவர் முந்தைய புலவரைவிட நன்றாகப் புகழ்வாரா?<br /> <br /> ''நாடாளல் மன்னர்க் கழகு. கவியெழுதி<br /> ஏடாண்டால் மக்கள் எதுசெய்வர் - ஓடோடி<br /> குடித்துவிட்டுப் பாட்டெழுதி கேவலப் பட்டபுகழ்<br /> வடித்துவைப்பேன் வார்த்தை தொகுத்து.''<br /> <br /> அடப்பாவி, அன்று பாரில் கேவலப் பட்டதைக் கிண்டல் செய்கிறானா? வாளை உருவிக்கொண்டு,. கட்டிலில் இருந்து மடேல் என்று கீழே விழுந்துவிட்டேன்.<br /><br /> மணியைப் பார்த்தேன். படுத்து அரை மணிகூட ஆகவில்லை. மண்டையின் குடைச்சல் தாங்காமல் கிறுகிறுத்தது தலை. முகம் கழுவிக்கொள்ளக்கூடத் தோன்றவில்லை.<br /><br /> பார் இதைப் பார், பாரில் நிகருண்டோ இதற்கு?<br /><br /> பாரில் எழுதிய காகிதத்தைத் தேடி எடுத்துக்கொண்டேன். எப்படியாவது இதைத் துப்புத் துலக்காவிட்டால் வாழவே துப்பில்லை என்று அர்த்தம்.<br /><br /> ரெண்டு தெரு தள்ளி இருக்கும் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் ஒருவர். அவரும் கதை எல்லாம் எழுதுவார். மூக்குப்பொடி வாங்க கைமாத்து அடிக்கடி கேட்பார். அதனால் அடிக்கடி சந்திப்பதில்லை. அவர் வீட்டுக்குப் போனேன்.<br /><br /> ''இது பதினஞ்சு அல்லது பதிநாலாம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்த தமிழ் மாதிரி இருக்கு''.<br /><br /> ''இதுக்கு அர்த்தம்கூட இருக்குங்களா?''<br /><br /> ''என்னிக்கு சாகப் போறோம்னு தெரியாது. நம்ம உடலைக் கழுகு கொத்தி சிதைக்கிறதுக்கு முன்னாடி படவா நீ சிவனைக் கும்பிடு'ன்றா மாதிரியான கருத்து...'' என்றார்.<br /><br /> இப்படி தத்துவார்த்தமான பாட்டை நான் எப்படி எழுதினேன்..? ஒருவேளை அந்த ஐயடிகள் காடவர்கோன் சாமியாராக இருப்பாரோ? என்ன கண்றாவி இது. எங்கிருந்தோ 'மனமே நீ ஈசன் நாமத்தை' என்று பழைய காலப் பாட்டு கேட்டது. இதிலும் நாமமா அதும் சிவபெருமானுக்கே நாமம் போடுறான்கள்...<br /><br /> அட, சங்கமேஸ்வரன்!<br /><br /> பழைய பொருட்களின் பிரியன். பழைய பாடல்கள், பழைய திரைப்படங்கள், பழைய கால நாணயங்கள் சேகரிப்பவன். அவன் சாப்பிடுவதே பழைய அழுகிய தக்காளிதான் .மயிலாப்பூர் சுடுகாட்டுப் பக்கத்தில் அபார்ட்மென்ட். ஒருமுறை ஹொன்னப்ப பாகவதரின் பாட்டுக்களை - 'காடுடைய சுடலைப் பொடி பூசி' - கேட்கச் சொல்லி வற்புறுத்தியதில் இருந்து அவனோடு தொடர்பு துண்டுபட்டுப் போயிற்று.<br /><br /> ''மிக்ஸர் சாப்பிடுறியா?'' என்று தந்தான் சங்கமேஸ்வரன். சங்ககால மிக்ஸரா? இன்னும் என்னென்ன புராதன வஸ்துக்கள் வைத்திருக்கிறானோ...<br /><br /> நான் சொன்ன எல்லா விவரங்களையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டான்.<br /><br /> ''முன்னால காஞ்சிபுரம் பக்கத்துல காடவர் இன மக்கள் இருந்தாங்கன்னு எதிலேயோ படிச்ச ஞாபகம் இருக்கு'' என்று தாடையைச் சொறிந்தான்.<br /><br /> நமக்குத் தெரிஞ்ச காஞ்சி ஆசான்கள் போலிஸ் ஸ்டேஷன்வரை மார்னிங் வாக் போய்வருகிறார்கள்!<br /><br /> என் நாடித்துடிப்பு எகிற ஆரம்பித்தது. ''ஒரு நிமிஷம்'' என்று சொல்லிவிட்டு யார் யாருக்கோ போன் போட்டான்.<br /><br /> ரொம்ப நல்லவனாக இருக்கிறான். ஹொன்னப்ப பாகவதர் பாட்டைக் கேட்டே இருந்திருக்கலாம்.<br /><br /> ''பிடிச்சிட்டேன் நண்பா'' என்று உற்சாகமாகச் சொன்னான் சங்கமேஸ்வரன். அவனுக்குத் தெரிந்த ஒருவர் அந்த மன்னனைப் பற்றிப் படித்திருக்கிறாராம்.<br /><br /> ''அவருக்கு உடம்பு முடியாததால அவர் வீட்டுக்கு நம்மளைக் கூப்பிடுறாரு.''<br /><br /> ''உடனே விடுரா, ஜுட்!''<br /><br /> காற்றினும் கடுகி விரைகிறது மனப்புரவி, மனப்புரளி!<br /> <br /> (நாளை)<br /><br />ரமேஷ் வைத்யாhttp://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-625624242298356997.post-58713649009021186582010-09-27T01:15:00.000-07:002010-09-27T01:28:51.174-07:00ஐயடிகள் காடவர்கோன் தொடர் கதைரெண்டு பேர். நாற்காலியில் உட்காரும் இடத்தில் கையை வைத்து, கண்கள் செருகி சுவரில் சாய்ந்து தரையில் உட்கார்ந்திருக்கும் ஒருவர். அறிவின் விஸ்தீரணம் நரையில் தெரிய, மிச்சமிருக்கும் சொச்ச நாட்களில் இலக்கியத்தைக் காப்பாற்ற இருமலுடன் வந்திருக்கும் ரெண்டு பெரியவர்கள். மருந்துக்கும் பெண் கிடையாது. அவர்கள் வடிக்கும் மூடிதிறந்த ஆவேச இலக்கியப் பக்கங்களைக் கண்டால் இந்தப் பெருசுகள் மூச்சு நின்றுவிடும்.<br /><br /> இலக்கியக் கூட்டம்.. மொத்தத்துக்கு இருபத்தைந்து டிக்கெட்டுகள் இருந்தால் அதிகம். முதலில் ஓர் இலக்கியவாதி மதராஸில் ட்ராம் வந்து குதிரை வண்டிய அழிச்சிட்டது, என்று ஏதாவது ஆக்சிடென்ட் பற்றிப் பேசுவார். அடுத்து இன்னொரு அழுக்குச்சட்டைக்காரர் அந்த மாதம் பத்திரிகைகளில் வெளியான சிறுகதைகளில் சிறந்ததாக ஒன்றைத் தேர்ந்தெடுப்பார். 'அப்பாவுக்கு அரைச் செங்கல்' என்கிற என் சிறுகதை 'கழிவு' பத்திரிகையில் வெளிவந்திருந்தது. என் கதைக்கோ, இதைவிட மோசமான இன்னொரு கதைக்கோ பரிசு கிடைக்கலாம்... அழுக்கு நோட்டானாலும் அப்போதே தருவார்கள். பாட்டிலுக்கு உறுதி.<br /><br /> மோட்டார் சைக்கிள் ரேசில் எல்லாம் ஜெயிச்சவன் பீரை எடுத்து பிஸ்க்கவில்லையா நாலாபக்கமும்? ரைட்டர்னா கூடாதா?<br /><br /> கூட்டம் ஆரம்பித்தது. ஒரு வெள்ளிப்பனித்தலையர் எழுந்து, ''இங்கே எல்லாரும் எல்லாருக்கும் பரிச்சயம்தான். இருந்தாலும் ரெண்டு மூணு புது-கிழ-முகங்கள் தெரியறதால, எல்லாரும் அவங்கவங்க பேர் சொல்லி சாவறதுக்குள்ளாற அறிமுகப்படுத்திக்கலாமா'' என்றார். ஒவ்வொருவராக பேர் சொல்லிக்கொண்டு வந்தார்கள்.<br /><br /> எனக்கு முன்னால் இருந்தவர் சொல்லிமுடித்ததும் நான் எழுந்து ''ஐயடிகள் காட... ம்... சிவதாசன்'' என்று சொல்லிவிட்டு உட்கார்ந்தேன்.<br /><br /> எனக்குக் குழப்பமாக இருந்தது. சிவதாசன் என்று சொல்வதற்குப் பதிலாக வேறேதோ... ஹாங்... ஐயடிகள் காடவர்கோன் என்று சொல்லப் போனேனே, அது ஏன்? கவுந்தி அடிகள், கேள்விப்பட்டிருக்கிறேன். தாண்டவக்கோனே - பாட்டுக் கேட்டிருக்கிறேன். இது யார் ஐயடிகள் காடவர்கோன்?<br /><br /> மூளை சூடானதுபோல் தோன்றியபோது யோசிப்பதை நிறுத்தினேன். கூட்டத்தில் ஒன்ற முடியாமல் அந்த அரங்கின் ஜனத்தொகையை இருபத்தி நாலாக்கிவிட்டு வெளியேறினேன். ஐயா கோவிச்சுக்காமல் பரிசைத் தபாலில் அனுப்பவும், பாட்டிலாக என்றாலும் ஓ.கே.<br /><br /> வீட்டுப் பிடுங்கல், வேலைபார்க்கும் உரத் தொழிற்சாலை சவால்கள் என்று பரபரப்பில், இந்த விஷயத்தை மறந்தே போனேன்.<br />*<br /><br /><br /> ''சார், 'ரெப்'ஆ இருந்த நீங்க ஸீனியர் ரெப் ஆகியிருக்கீங்க. எங்களுக்கெல்லாம் பார்ட்டி கிடையாதா சார், கிடையாதா என்ன, எந்த இடத்திலேன்னு சொல்லுங்க..'' என்றாள் அக்கவுன்ட்ஸ் நந்திதா. பார்ட்டி சந்தோஷமாகக் கொடுக்கலாம். தண்ணி பார்ட்டியானால். இதுகளெல்லாம் எல்லாவற்றிலும் சைவம். பரவால்லை, கேட்டவள் தனியே லிஃப்ட் மறைவில் ஒரு முத்த வாய்ப்பு அளிக்கலாம்... பெண்களோடு லஞ்ச் சாப்பிட்டுவிட்டு, மாலை வீரஅசைவர்கள் எல்லாம் பாருக்குப் படையெடுத்தோம். <br /> <br />''எம்.சி. ரெண்டு ஃபுல்லு குடுப்பா.''<br /><br /> ''எம்.சி. இல்ல சார், ஹனிபீ வாங்க்கிர்றீங்களா?''<br /><br /> ''ஜானெக்ஷா இருக்கா..?''<br /><br /> ''ஜானெக்ஷா இல்ல சார், டே நைட் தரட்டுமா?''<br /><br /> டாஸ்மாக் வந்ததிலிருந்து நாம் குடிப்பது கடைக்காரன் சாய்ஸ் என்று ஆகிவிட்டது.<br /><br /> ''என்ன எழவு இருக்கோ அதில ரெண்டு ஃபுல்லு குடு. சீரழிஞ்ச சிகரெட் மூணு பாக்கெட் வாங்கிக்க. பாழாப்போன பாக்கு பத்து வாங்கிக்க.'' அவரவரும் தங்களுக்குப் பிடித்த சைட் டிஷ் சொன்னார்கள். கடைப் பையன் முகத்தில் 'ஏகப்பட்ட டிப்ஸ்' சிரிப்பு.<br /><br /> எங்க காட்ல தண்ணின்னா, அடேய் உங்காட்ல மழை.<br /><br /> பார்ட்டி களைகட்டியது. எங்கே அடுத்தவன் அடுத்த ரவுண்டுக்குப் போய்விடுவானோ என்ற பயத்தில் எல்லோருமே வேகவேகமாகக் குடித்தோம். சிகரெட் புகை. மூத்திர நாற்றம். தலை கிர்ரடித்து ஹைதர் அலி காலத்து ஃபேன் போலச் சுழன்றது.<br /><br /> அட்டெண்டர் ராஜு ஒரு ஜோக்கை ஆறாவது முறையாகச் சொல்லிக்கொண்டு இருந்தான். என் மூளைக்குள் சரளைக் கல் சரிய ஆரம்பித்த நேரம். என்ன தோன்றியதோ தெரியவில்லை, டேபிள் மீது இருந்த மெனு கார்டின் பின்னால் கிறுகிறு என்று எழுத ஆரம்பித்தேன்.<br /><br /><br /> ''த்தா டேய், நான் ஒரு கவிதை எழுதியிருக்கேன், படிங்கடா'' என்று கொடுத்தேன். போதையில் செல்லத்துக்குத்தான் முக்கியத்துவம். மரியாதையை மறுநாள் பராமரித்துக்கொள்ளலாம்.<br /><br /> ராஜு, நான் எழுதியதை வாங்கிப் படித்தான்.<br /><br /> ''அழுகு திரிகுரம்பை ஆங்கது விட்டாவி<br /> ஒழுகும் பொழுதறிய ஒண்ணா - கழுகு<br /> கழித்துண் டலையாமுன் காவிரியின் தென்பால்<br /> குழித்தண் டலையானைக் கூறு" <br /><br /> என்ன சார் இது, தமிழ் எழுத்துல கன்னடப் பாட்டு மாதிரி இருக்கு..?'' என்றான் ராஜு. <br /><br /> ''இவ்வளவு நேரம் ராஜு சொன்ன ஜோக்கைவிட காமெடியா இருக்கு'' என்றான் இன்னொரு மங்குணிப் பாண்டியன். <br /><br /> ''அட, சும்மா இருங்கப்பா... ஆமா சிவதாசன் இந்தப் பாட்டுக்கு என்ன அர்த்தம்?''<br /><br /> காகிதத்தை வாங்கிப் பார்த்தேன். நானா இதை எழுதினேன்..?<br /><br /> (நாளை)ரமேஷ் வைத்யாhttp://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-625624242298356997.post-54822126540503811422009-07-09T07:05:00.000-07:002009-07-09T07:06:20.308-07:00கம்பன்"ஒருத்தி இருக்கிறாள். ஒன்றுமில்லாமல் காலியாக இருக்கும் என் மனத்துக்குள் தன்னை அவள் இருத்திக்கொண்டாள். அவள் வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள். அறுபத்து நான்கு கலைகளையும் கருத்தில் வைத்திருப்பாள். நம் ஐம்புலன்களில் ஏதொன்றும் கலங்காமல் கருத்துகளைத் திருத்துபவள் அவள்தான். நான்கு திசையையும் பார்க்க நான்கு தலைகள் கொண்ட பிரமனின் தேவியான அவளை நான் ஒருபோதும் மறவேன்." <br /><br /><br />இது கம்பர் பாட்டு. <br />பாட்டைப் பாருங்கள் மேற்சொன்ன விளக்கத்தின் மொழிக்கு மிக நெருக்கத்தில் இருக்கும். <br /><br />பாட்டு: <br /><br />ஒருத்தியை யொன்றுமி லாவென் மனத்தினு வந்துதன்னை<br />இருத்தியை வெண்கமலத் திப்பாளை யெண்ணெண் கலைதோய்<br />கருத்தியை யைம்புலனுங் கலங்காமற் கருத்தை யெல்லாம்<br />திருத்தியை யான்மற வேன்றிசை நான்முகன் தேவியையே. <br /><br />வார்த்தைக் கோவைக்காக இதை இங்கே குறிப்பிடுகிறேன். மற்றபடி, ராமாயணத்தைத் தவிர, கம்பன் எழுதிய பிற நூல்கள் தென்படுவது அரிதிலும் அரிதாக இருக்கிறது. மேற்சொன்ன பாடல் சரஸ்வதி அந்தாதியில் வருகிறது. <br /><br />இந்த நூலின் பாயிரமாக இரண்டு பாடல்கள் உண்டு. ரசனைக்குரிய அந்தப் பாடல்கள் யாருக்காவது நினைவிருந்தால் சொல்லுங்களேன்.ரமேஷ் வைத்யாhttp://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-625624242298356997.post-40405271981301862502009-06-26T03:57:00.000-07:002009-06-26T04:06:10.703-07:00நாடோடிகள் விமர்சனம்உதயம் தியேட்டருக்கு ரொம்ப நாளைக்கப்புறம் இன்று போனேன். நாடோடிகள் படம். இடைவேளையில் பாப்கார்ன் கொறிக்க வந்தால் அங்கே சசிகுமார் நிற்கிறார். ''சசி, பிச்சுப்புட்டியேப்பா... தமிழ் சினிமான்னாலே காறித்துப்பணும்ங்கிறது மாதிரியான நிலைமையை உன்னை மாதிரி ஆளுகதான் மாத்திட்டிருக்கிய" என்றேன். பணிவோடு புன்னகைத்தார். அப்புறம் அவரை ரசிகர் குழாம் சூழ்ந்துகொண்டது. <br /><br />அநேகமாக படத்தில் நடித்திருந்த அத்தனை பேரும் முதல் காட்சிக்கு அங்கே ஆஜர் ஆகியிருந்தார்கள். "இந்தத் தியேட்டர்தான் மக்களோட பல்ஸ் பாக்குற எடம்" என்றார் நண்பர். <br /><br />சசிகுமாரை மட்டுமில்லாமல் அங்கே வந்திருந்த நடிக நடிகையர் அனைவருக்குமே ரசிகர்கள் ஆரவாரத்தோடு முகமன் கூறினார்கள். நா.முத்துக்குமாரிடம், "பிரமாதம் போ" என்று சொல்லிவிட்டு தம்மைப் பற்றவைத்தேன்.<br /><br /><br />"அது சரீ, விமர்சனம்?" என்கிறீர்களா?<br /><br /><br /><span style="font-weight:bold;">படத்தைப் போய்ப் பாருங்க சாமிகளா...</span>ரமேஷ் வைத்யாhttp://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.com20tag:blogger.com,1999:blog-625624242298356997.post-10618696305010579422009-06-20T04:24:00.000-07:002009-06-20T04:35:49.286-07:00ஒருவன் நனையவில்லைஒருநாள் குரு தன் சீடர்களிடம் கேட்டார்: ''இரண்டு பேர் நடந்துகொண்டிருந்தார்கள். அப்போது பெய்துகொண்டிருந்த மழையில் ஒருவன் நனையவில்லை" என்றார். <br /><br />இதைக் கேட்ட சீடர்கள் வெவ்வேறு காரணங்களைச் சொன்னார்கள். <br /><br />''நீங்கள் எல்லோருமே நான் சொன்னதை ஒருவிதமாகவே பார்க்கிறீர்கள். ஒருவன் நனையவில்லை; இருவருமே நனைந்துவிட்டார்கள் என்பதைத் தான் குறிப்பிட்டேன்'' என்றார் குரு.<br /><br />சீடர்கள் தலை குனிந்தார்கள்.ரமேஷ் வைத்யாhttp://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-625624242298356997.post-91693585927919731562009-06-15T03:34:00.000-07:002009-06-15T03:35:30.989-07:00நேற்றைய விபத்துகோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் கோகுலம் சிட்ஃபண்ட்ஸ் சிக்னலில் வலப்புறம் திரும்ப வேண்டும். சிக்னலில் சிவப்பு. டூ வீலரை நிறுத்தினேன். எனக்கு முன்னால் ஒரு கார் மட்டும் நின்றிருந்தது. பின்னால் இருந்த காரின் டிரைவர் ஹார்ன் அடித்தபடி இருந்தார். என் வண்டியை சற்று முன்னகர்த்தினேன். விடாமல் ஹார்ன் அடித்துக்கொண்டே இருந்தார் மேற்படி டிரைவர். இருந்த சில அங்குல இடத்துக்கு நகர்ந்தேன். ஆனாலும், சிவப்பு விளக்கு எரிந்துகொண்டிருக்கும்போதே காரை நகர்த்தி வந்து என் பைக்கை இடித்தான் அந்த டிரைவன். இடக்காலை பலத்த யத்தனத்தோடு உறுதியாக ஊன்ற முயன்று ... முடியாமல் விழுந்துவிட்டேன். இப்போது சிக்னலில் பச்சை. விழுந்த வண்டியைத் தூக்க என்னால் முடியவில்லை. எவ்வளவோ முக்கிப்பார்த்தும்... ம்ஹூம்! அப்போது, நெடுஞ்சாலையே ஸ்தம்பித்து நின்றது. அடர்த்தியான டிராபிக்கில். என் வண்டியைக் கடந்து போகமுடியாமல் என்னை இடித்த காரும், மற்ற வாகனங்களும் நின்று ஹாரன்களைக் கதறடித்துக்கொண்டிருந்தன. பக்கத்திலேயே நின்றிருந்த டூவீலர் பில்லியனில் உட்கார்ந்திருந்த திடகாத்திரனைப் பார்த்து, ப்ளீஸ், ஹெல்ப் பண்ணுங்க' என்று கத்தினேன். அவர் வேறுபக்கம் திரும்பிக்கொண்டார். <br />ஆச்சர்யமாக இருந்தது. மனிதர்கள் பிறருக்கு உதவும் பரோபகார குணத்தோடு இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை, வண்டியைத் தூக்க எனக்கு உதவி நான் ஓரமாகப் போய்விட்டால் நீங்கள் போக வழி கிடைக்குமே என்று நினைத்துக்கொண்டேன்.ரமேஷ் வைத்யாhttp://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.com43tag:blogger.com,1999:blog-625624242298356997.post-69987453378988828532009-06-09T00:53:00.000-07:002009-06-09T01:09:26.619-07:00ஓஹோஹோ அம்மம்மா ஓல்டு மாங்க் ரம்மம்மா"ஹுக்கும், கதையெழுதுறீங்க. கட்டுரை எழுதுறே. பாராட்டி புனைபெயர்ல லெட்டரும் எழுததிக்கிறீங்க, என்ன பிரயோஜனம்... என்னைப் பத்தி எப்பவாவது எழுதி இருக்கியாடா, என் வெண்ட்ரூ? "<br /><br />போத்தலின்,இந்த வரிகளை நான் நாகரிகமாக எழுதியிருந்தாலும், சிச்சுவேசன் என்னமோ எஸ் எம் எஸ் படத்தில் சந்தானம் பேசும் டெரர் டயலாக்குக்கு ஈக்குவலானது.. கிளாஸுக்கும் தண்ணீர் பாக்கெட்டுக்குமான இடைவெளி அதிகம் இருந்தது. இரண்டே வார்த்தைகளில் சொல்வதென்றால்,‘டவுசர் கிளிந்தது’. அடுத்து தாவு தீர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில்.. “என்ன செல்லம் இப்பிடி சொல்லிட்ட?.உன்னைப் பத்தி எவ்வளவு எழுதி வச்சுருக்கேன் தெரியுமா?” என்று சொல்லிவிட்டு.விட்டு,ட்டு,டு..என்று விக்கி வெலவெலத்தாலும், டங்கு டரியலாகாமல் இருக்க, இந்த இரவை சரக்குக்கான கடிதமாய்...<br /><br />******<br /><br />ஓஹோஹோ அம்மம்மா ஓல்டு மாங்க் ரம்மம்மா,<br /><br />பிளஸ் டூ கடைசிப் பரிட்சை முடித்து தலையில் துண்டு போடாத குறையாக ஒளிந்து ஒளிந்து பாருக்குள் வந்து நீ குழந்தை போல நின்றிருந்த இடங்களிலேயே நானும் நின்று, மூலை முடுக்கில் இருந்து எவனாவது பார்த்துத் தொலைக்கிறானா என்று பயந்து பயந்து , ஹும்ம்ம்...<br /><br />சாக்கணாக் கடையின் ஏதோவொரு 'சரக்கு' மாஸ்டரிடம், “ஒரிஜினல்தானே இது” என்று சந்தில் சிந்து பாடி, “என்னடா கேட்டே... அக் மார்க் பட்டை மாதிரி இருக்கும்டா” என்று அவர்கொஞ்சம் பீர் வார்த்தார்.<br /><br /><br />அதன் பிறகு உன்னைப் பார்க்க கடைக்கு நான் வந்த அந்த சனிக்கிழமை என்னில் இன்னும்.<br /><br />சளி பிடித்தது என்று சொன்னதற்கு அர்த்தம், ரம்மில் சுடு தண்ணியும் மிளகுத் தூளும் கலந்து அடி என்கிற மருத்துவ உண்மையை வழக்கமாக்கிக்கொண்டது அன்றிலிருந்துதான்.<br /><br />45 மில்லிதான் நான் முதலில் போட்டது. அதன்பிறகு கடைசிவரை என்கூட வரப் போகிறாய் என்பதையறியாமல்... உன் மீதான காதல் வாய்த்த தருணம் காந்தி ஜெயந்தியன்று கடையடைத்திருந்த தினம்தான். பிளாக்கில் விற்கிறார்களா என்று தயங்கித் தயங்கி நான் நான் தேடினேன்...‘சிங்காரி சரக்கு நல்ல சரக்கு’ என்று பாடல் எங்கோ ஒலித்தது நினைவில் இன்னும் இன்னும் இன்னும் இருக்கிறது துவர்க்கிறது.<br /><br />அப்புறம் அன்றிரவு கைகால் நடுங்க, தூக்கத்தை இழந்த அதேவேளைதான் நான் உன்னில் என்னை இழந்து விட்டேன் என்றுணர்ந்த தருணமும்.<br /><br />மறுநாள் மாலை வீட்டை விட்டுக் கிளம்பும்போதே புன்சிரிப்பு என்னை ஆட்கொண்டது. அது கொஞ்சம் கோணலாக இருந்ததையும் உணர்ந்தேன். எம்.ஜி.ஆருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். மதுவிலக்கைத் தளர்த்தி எத்தனை தலைமுறைகளைச் சந்தோஷப்படுத்தினார்..!<br /><br />ஒருவேளை லோடு இறக்கிக்கொண்டு இருந்தார்கள் எனில் , ஒரு நொடி அங்கே காத்திருந்தாலும் உயிர்வலி எனக்கு ஏற்ப்படுமே,ஏனெனில் அந்த இடமும் அங்கு நிற்பர்வர்களைப் பற்றிய எண்ணமும் அதைப் பற்றி சமூகம் கொண்ட பார்வையும் இப்படி என்ன என்னமோ தோன்ற... ஒரே அழுத்து..அவ்வளவு வேகம் போனதில்லை நான் அடுத்த கடையைத் தேடி. அங்கே போய்ச் சேர்ந்தவுடன் உனக்காகக் காத்திருக்கும்பொழுதே இன்னுமொரு சந்தேகம். அங்கேயும் லோடு இறக்க வந்துவிடுவார்களோ என்று. எதற்கு வம்பு என இரண்டு கடைகளுக்கும் நடுவில் நின்றிந்த அந்த நிமிடங்களில் எத்தனை %^$#&*%$# என்பதை எழுத இன்னும் தமிழில் வார்த்தைகள் கண்டுபிடிக்கவில்லையடி ரம்மம்மா..<br /><br />அடுத்த நொடி உன் முன் நான்.கண்முன் நீ. நிறமற்ற போத்தலில் நீ செம்பழுப்பாய் இருந்தாலும் அப்போதைய என் தேவை ஒரு கட்டிங் கரெக்ட் பண்ணுவதே.ஏனெனில் நம்மைப் பொறுத்தவரை 16 மணிநேரத்திற்கும் மேலான இடைவெளி என்பது ஒரு யுகக் கணக்காகிப் போனதால்...<br /><br />ரோட்டோர ஆயாக்கடையைப் பார்த்ததும் ஆம்லேட் சாப்பிடலாமா என்று தோன்றியது. ஆம்லேட் சொல்லும்முன் அந்தக் கடை வாசலில்...ஒருவன் ஆம்லேட் தின்றுகொண்டிருந்தானே... அவன் தோற்றம்... அதுவும் அந்த விரல்கள்... அதுவும் ஒரு புண்நாள்.<br /><br />உன்மீதான என்காதல் எவ்வளவு காட்டமாய்ப் பயணிக்கிறது என்பது எனக்கு மட்டுமே தெரியும். சந்தேகமிருந்தால் என் உடலை அரிந்து எவனையாவது ரத்தம் குடித்துப் பார்க்கச்சொல், இரண்டு குவார்ட்டர் அடித்ததுபோல் இருக்குமென் ரத்தம்.<br /><br /><br />உன் மீதான என் காதல் இனி கூடுவதற்கு வாய்ப்பேதுமில்லை.ஏனெனில் ஃபுல்லை விட கூடுதலாக அடித்தால் கட்டுப்படியாகாது. மேல்வரும்படி கிடைத்தால் கூட்டியிருப்பேனே...<br /><br />ஆக..<br /><br />என் உணர்வின் உச்சம் நீ.. வாழ்க என் மீதான உன் காதல். அது மட்டுமே என்னை விடுவிக்கும் இனி.<br /><br /><br />மொத்தமாய் சித்தம் முழுக்க உன் நினைவுகள்<br />ரத்தம் முழுக்க உன் மூலக்கூறுகள்,இதயம் முழுக்க நீ.. என்றாலும்<br />நான் தானே நீ...<br /><br />இப்படிக்கு,<br /><br />போதையாய்,<br />மப்பில்<br />'கப்பு'டன்<br />உளறலுக்கு<br />குவார்ட்டர் கோயிந்தன்ரமேஷ் வைத்யாhttp://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.com19tag:blogger.com,1999:blog-625624242298356997.post-75390514210917547462009-06-02T01:07:00.000-07:002009-06-02T01:08:40.339-07:00என் கைபேசிக்கும் எனக்கும் சண்டைஇல்ல சார், <br />பேண்டுக்கிட்டிருக்கேன்<br />கழுவுனதும் வந்துர்றேன்<br />என்பதாக முடிந்த <br />உரையாடலில் பங்கு பெற்ற எனக்கு <br />தொலைபேசி நாகரிகம் தெரியும்<br /><br />ஒருமுறை வெளியூர் ஓட்டல் ஒன்றில் <br />புணர்ந்துகொண்டிருந்தபோது <br />வந்த <br />அழைப்பையும் எடுத்துப் பேசினேன்<br /><br />வெறியேறிய தருணங்களில் <br />நான் <br />தூக்கியெறிவது<br />என் கைபேசியாகவே இருக்கிறது<br /><br />என் எண் திரையில் ஒளிர்ந்தால்<br />தவிர்க்கும் பெண்களென<br />மூவர் உண்டு<br />அவர்களில் யாரும் உறவினர் இல்லை<br /><br />அகாலத்தில் <br />மயங்கிக் கிடக்கையில் <br />அழைத்து <br />இலக்கண சந்தேகம் கேட்டு<br />எங்காவது இலக்கில்லாமல் பிக்னிக் போவோமா<br />என்கிறான்<br />நண்பனென்கிற பரம வைரி<br /><br />கடும்கோபத்தில் <br />நண்பனைப் பழிவாங்க<br />குரலெடுத்துப் பாடுகிறேன் நிசியில்<br /><br />வீடு காலிசெய்யச் சொல்லிவிட்டார்கள்<br /><br />சாமான் சட்டிகளைப் போட <br />ஒரு ரூம் கிடைக்குமா<br />ப்ளீஸ்...ரமேஷ் வைத்யாhttp://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.com26tag:blogger.com,1999:blog-625624242298356997.post-36640427402834274162009-05-10T03:42:00.000-07:002009-05-10T03:43:42.718-07:00சும்மாஇலக்கியத்தின் பிரபஞ்சத்துவம் எது?<br /><br />இனம், மதம், மொழி, இடம் என்று மனித குலம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. தீவிரவாதம், உலகமயமாதல்... பழைய மதிப்பீடுகள் அசையத் தொடங்கியிருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் தீவாகிக்கொண்டிருக்கிறான். இந்நிலையில் மனித குலத்தைப் பிணிக்கும் சரடாக இலக்கியம் மட்டுமே இருக்கிறது.<br /><br />அரசியல் அடுத்த தேர்தலை சிந்திக்கிறது. மதம் அடுத்த ஜென்மத்தைச் சிந்திக்கிறது. இலக்கியம்தான் நேற்று இன்று நாளை குறித்துச் சிந்திக்கிரது.<br /><br />எந்த மேகத்திலிருந்து விழுந்தாலும் மழைத்துளி மண்ணுக்கே சொந்தம். எந்த மொழியில் எழுதப்பட்டாலும் இலக்கியம் மனிதனுக்கே சொந்தம். பூமிக்குள் மறைந்து கிடப்பவற்றை அறிவியல் தேடுவது போல வாழ்க்கைக்குள் மறைந்துகிடப்பவற்றைக் கலை தேடுகிறது. <br /><br />புல்லாங்குழலுக்குள் புகுந்து வரும் கரியமில வாயு இசையாய் வெளிப்படுவது போல படைப்புக்குள் நுழைந்து வெளிவரும்போது படைப்பாளியின் வலி ஆனந்தமாகிவிடுகிறது. <br /><br />எல்லாப் படைப்புகளும் இயற்கையின் நிழல் அல்லது வாழ்வின் பிரதி.<br /><br />நிறங்களை ஆளாத் தெரிந்தவன் ஓவியனாகிறான். சத்தங்களை செதுக்கத் தெரிந்தவன் இசைஞனாகிறான். மொழியை மோகித்தவன் படைப்பாளியாகிவிட்டான். <br /><br />வேறு வேறு கண்களால காணப்பட்டாலும் அழகு ஒன்றுதான். வேறு வேறு கண்களால் சிந்தப்பட்டாலும் கண்ணீர் ஒன்றுதான். <br /><br />நாகரிகங்களால் பிளவுபட்டுக் கிடக்கும் மனிதர்களைக் கலாசாரத்தால் ஒன்று படுத்தும் கலைதான் இலக்கியம்.<br /><br />24 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிறந்த கொசு இன்னமும் கொசுவாகவே இருக்கிறது. ஆனால் மனிதன் மாறிவிட்டான். காரணம் மொழி. <br /><br />நன்றி, வணக்கம்.ரமேஷ் வைத்யாhttp://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-625624242298356997.post-68898866646501123512009-03-31T00:36:00.000-07:002009-03-31T00:39:53.435-07:00தண்ணிலை விளக்கம்!பழைய நண்பர்கள் மன்னிக்கவும். இது என் புதிய நண்பர்களுக்காக (சரித்திரம் இம்பார்ட்டன்ட் தானே...)<br /><br /><br />இருக்கும் வரை சுகிக்கும் கலை<br />படிக்கும் ஒரு மாணவன்<br />இனிக்கும் பொருள் அனைத்தும் தொடத்<br />துடிக்கும் பெரும் காமுகன்<br /><br />பனிக்கும் எரி மலைக்கும் இடை<br />நடக்கும் ஒரு சாகசன்<br />கிடக்கும் தெரு கடக்கும் நொடி<br />திகைக்கும் சிறு மானுடன்<br /><br />சிரிக்கும் மலர் தெறிக்கும் இசை<br />ரசிக்கும் நல் காதலன்<br />குடிக்கும் நொடி வழுக்கும் மொழி<br />பிதற்றும் ஒரு கேவலன்<br /><br />வெறுக்கும் விருப் பிருக்கும் என<br />தினைக்கும் உன் ஞாபகம்<br />திறக்கும் விழி இமைக்கும் செயல்<br />மறக்கும் உன் பேரெழில்<br /><br />சிரிக்கும் இதழ் முறைக்கும் விழி<br />இனிக்கும் நீ ஓவியம்<br />உனக்கும் அடி எனக்கும் வரும்<br />பிணக்கும் ஒரு நாடகம்.ரமேஷ் வைத்யாhttp://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.com26tag:blogger.com,1999:blog-625624242298356997.post-21289894352073207712009-02-23T02:40:00.000-08:002009-02-23T02:42:38.603-08:00காதல் சதுக்கம்<span style="font-weight:bold;">வந்து உட்கார்ந்து கால் மணி நேரம் ஆகியும் ஜெர்ரி எட்சனுக்குப் படபடப்பு அடங்கவில்லை. நெஞ்சுக்குள்ளே ஓடும் ரயிலின் தடக் தடக் குறையவில்லை. 'எழுந்து போய்விடலாமா' என்றுகூட நினைத்தான். அப்பாவின் கேலியான சவாலும், அம்மாவின் பாசமான கண்டிப்பும் நினைவுக்கு வந்தன.<br /><br />"ஏண்டா உனக்கு இருபத்திரெண்டு வயசு ஆச்சு, ஞாபகமிருக்கா இல்லையா? ஆபீஸ்ல இருந்து வர்றே. புஸ்தகமும் கையுமா ரூமுக்குள்ளே போய் உட்கார்ந்துடறே. இல்லைன்னா கம்ப்யூட்டர், இன்டர்நெட். இதுவரைக்கும் ஒரு பொண்ணு கூடவாவது அவுட்டிங் கிவுட்டிங்னு எங்கேயாவது போயிருக்கியா?" அம்மாவின் குரல் ரொம்பவே தழுதழுத்துவிட்டது.<br /><br />அப்பா ஒருபடி மேலே போய், "கொஞ்சம்கூட சோஷல் மூவ்மென்ட்டே இல்லாம எப்படித்தான் படிப்பும் முடிச்சுட்டு வேலையும் வாங்கினானோ..." என்று கேட்டேவிட்டார். விட்டால் இவனை டிஸ்மிஸ் செய்யச்சொல்லி ஆபீஸுக்கே லெட்டர் போட்டுவிடுவார் போலிருக்கிறது.<br /><br />இவனுக்கு மட்டும் பிறரைப் போல் நார்மலாக இருக்க ஆசையில்லையா என்ன? சுபாவம் என்று ஒன்று இருக்கிறதே... அழகு குறைந்த பெண் என்றால் அலட்சியம் வந்துவிடுகிறது. ரொம்ப அழகான் பெண்ணைப் பார்த்தாலோ காதலுக்கு பதில் பயம்தான் வருகிறது. காம்ப்ளெக்ஸ்! இது அப்பா, அம்மாவுக்குப் புரிந்தால்தானே...<br /><br />"நான் என்ன செய்யணும்னு எதிர்பார்க்கறீங்க?"<br /><br />"உன்னைச் சுத்தி நடக்கற விஷயங்களைப் பாரு. உன் வயசுப் பசங்களும் பொண்ணுங்களும் ரெஃப்ரெஷ் பண்ணிக்கறதுக்குன்னே காதலை உபயோகிக்கறது தெரியும். லவ், டேட்டிங் எல்லாம் எவ்வளவு பெரிய விஷயம்ங்கிறது புரியும்" என்றபடி அப்பாவைப் பார்த்துக் கண்ணடித்தாள் அம்மா. <br /><br />இவன் வெட்கப்பட்டு முடிப்பதற்குள், "லவர்ஸ் ஸ்கொயருக்குப் போ. எத்தனை விதமான ஜோடிகள் வர்றாங்க, லவ்லயே எத்தனை வகை இருக்குன்னு எல்லாம் தெரிஞ்சுப்பே. உனக்கே புத்தி வர சான்ஸ் இருக்கு. போ... போயிட்டு ராத்திரி வந்து என்கிட்டே சொல்லு. இந்தா" என்று கார் சாவியைக் கையில் திணித்தார் அப்பா. <br /><br />இதோ வந்தாச்சு. பார்த்தாச்சு, இந்தக் கண்கொள்ளாக் கண்காட்சியை. 'ஊரின் இளைஞர் ஜனத்தொகை இத்தனையா!' என்று அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. <br /><br />காதல் சதுக்கத்தில் எல்லா பெஞ்சுகளும் இரண்டு பேர் மாத்திரமே உட்காரும்படி டிசைன் செய்யப்பட்டிருந்ததை கவனித்தான். ஒவ்வொரு பெஞ்சிலும் ஒரு ஜோடி. உயரமான ஆள், குட்டைப் பெண்... பருமனான அம்மணி, ஒட்டடைக் குச்சி ஜென்டில்மேன். நடுத்தர வயது ஆபீஸர் தோற்றத்தில் ஒருவன், கூடவே கான்வென்ட் பெண் போன்ற ஆன்ட்டி... வெவ்வேறு தரங்களில், வெவ்வேறு நிறங்களில் மனிதர்கள். காதலர்கள். ஒரே ஒற்றுமை எல்லோருடைய முகங்களிலும் சந்தோஷம், சந்தோஷம், சந்தோஷம்!<br /><br />சிரித்தபடி, சீரியஸாக, சத்தம் போட்டபடி, முத்தம் கொடுத்தபடி, தோளில் கை போட்டு அணைத்துக்கொண்டு, மடி மீது தலைவைத்து, மார்பில் அடைக்கலம் தேடி... உக்கிரமாகக் காத்லிக்கும் ஜோடிகள்.<br /><br />தனியாகவும் ஓரிருவர் உட்கார்ந்திருந்தார்கள். 'காத்திருந்தார்கள்' என்று சொல்வதுதான் பொருத்தம். ஒன்று, காதலி வருவாள்... அல்லது இதுவரை எங்கேஜ் ஆகாதவன் என்றால் புதிய நட்பு கிடைக்கும் மனித உயிர்களிடையே புதிய உறவுகளை உருவாக்குவதற்கும். ஏற்கெனவே இருக்கும் உறவுகளைச் செழுமைப்படுத்துவதற்கும் வீனஸ் தேவதையின் நிதி உதவியோடு கட்டப்பட்டிருக்கும் ஏரியா காதல் சதுக்கம்...<br /><br />'தான் எதற்கு இங்கே வழி தப்பிய ஆடாக... திருவிழாவில் தொலைந்த குழந்தையாக...' என்று ஓரளவு படபடப்பு அடங்கி, யோசித்துக்கொண்டிருந்தபோது, நம்ப முடியாத அந்தக் காட்சியைப் பார்த்தான்.<br /><br />ஐம்பதடி தூரத்தில் இரண்டு யுவதிகள் இவனைக் காட்டி என்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருத்தி, 'மாட்டேன். என்னை விட்டுவிடு' என்பதற்கான உடலசைவை வெளிப்படுத்தினாள். வயதில் மூத்தவளாகத் தெரிந்த மற்றவள், ஏதோ சொல்லி தைரியப்படுத்துவதும் புரிந்தது.<br /><br />இவனுக்கு மறுபடி நெஞ்சு தடதடக்க ஆரம்பித்தது. 'நம்மைக் காட்டிக் காட்டி என்ன பேச்சு? ஒருவேளை அந்தச் சின்னவள் என்னால் கவரப்பட்டு... சே... நான் என்ன முதல் பார்வையிலேயே கவருமளவு கம்பீரமாகவா இருக்கிறேன்...'<br /><br />இதற்குள் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவர்கள் போல் இரு யுவதிகளும் ஜெர்ரியை நெருங்கினார்கள். 'என்ன அந்தஸ்தான தோற்றம்... கடவுளே என் வாழ்க்கையில் ஏதாவது அற்புதம் நடக்கப் போகிறதா?' அவசர அவசரமாகக் கைக்குட்டையை எடுத்து நெற்றியின் வியர்வைப் புள்ளிகளை அழுந்தத் துடைத்ததில் எரிந்தது நெற்றி. நெஞ்சுக்குள் ரயிலின் தடக்... தடக்... ஸ்டார்ட் ஆனது.<br /><br />பக்கம் வந்தவர்களில் கூச்ச சுபாவியாகத் தெரிந்த அழகிய பெண் (அட, அதற்குள் 'அழகிய' என்ற அடைமொழி தோன்றிவிட்டதே!) பேச ஆரம்பித்தாள். "வந்து... நீங்க... இந்த காதல் சதுக்கத்தைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?" அவள் குரல் கேட்டதும் பக்கத்து குரோட்டன்ஸில் இருந்து பட்டாம்பூச்சிகள் கிளம்பிப் பறந்தன. அவள் நெற்றியிலும் வியர்வை முத்துகளைப் பார்த்து இவனுக்குக் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.<br /><br /><br />அதே நேரம், அவள் கேட்ட கேள்வியினால் அவனுடைய நெஞ்சு ரயில் வேகம் பிடிக்கவும் ஆரம்பித்தது. சொஞ்சம் சுதாரித்துக்கொண்டவள் போல அவள் தொடர்ந்து பேசினாள்.<br /><br /> "காதலைப் பற்றி என்ன நினைக்கறீங்க?" நல்லது. இது நல்லூழ்தான். இவன் இந்த இடத்துக்கு வரவேண்டும் என்பதற்காகத்தான் இவனுடைய அதிர்ஷ்ட தேவதை காத்திருந்திருக்கிறாள்!<br /><br />"காதலை ப்ரபோஸ் பண்ண வேண்டியது ஆணா, பெண்ணா?" அடடே என்ன வாசனை, என்ன வாசனை! பெண்களின் உடலில் இயற்கையிலேயே இவ்வளவு வாசனை இருக்குமா என்ன?<br /><br />அவளுடைய கேள்விகளுக்கெல்லாம் தான் என்ன பதில் உளறினோம் என்று ஜெர்ரிக்குப் பதிவாகவில்லை. விதவிதமான ஸ்ருதிய்ல் ஏதேதோ ஒலிகளை எழுப்பிய உணர்வுதான் இருந்தது. 'கடவுளே இந்து இந்த இடத்தின் மகினையா, பெற்றோரின் ஆசீர்வாதத்தின் பலனா, அல்லது முற்பிறவியில்...'<br /><br />கடைசியாக அந்தக் கேள்வியையும் அவள் கேட்டேவிட்டாள்!<br /><br />"இப்போ என்னை மாதிரி ஒரு பொண்ணு உங்க கிட்டே ஐ லவ் யூ சொன்னா எப்பிடி ரியாக்ட் பண்ணுவீங்க..?" <br /><br />இவன் தாங்க முடியாதவனாக அவளுடைய கையைப் பற்றிக்கொண்டுவிட்டான். 'ஓ என் கடவுளே ஓ என் கடவுளே' என்கிற வார்த்தைகள் மட்டும்தான் மனதில் வந்தன.<br /><br />அதுவரையில்...<br /><br /><span style="font-weight:bold;">நண்பர்களே எனக்கு இந்தக் கதையை முடிக்கத் தெரியவில்லை. நீங்கள் முடித்தால் சந்தோஷப்படுவேன்.<br /><br />மிகவும் எதிர்பார்க்கிறேன். ப்ல்ஸ்!!!<br /></span></span>ரமேஷ் வைத்யாhttp://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-625624242298356997.post-33822962432919453762009-02-19T00:09:00.000-08:002009-02-19T00:54:33.542-08:00நண்பர்கள் நண்பர்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்1) வண்டி ஓட்டணும் ஜாக்கிரதை, ரெண்டு பெக் அடிச்சதுக்கப்பறம் கொஞ்சம் கேப் விடுங்க – இப்படி நாங்க சொல்ற எந்த வேலையையும் உருப்படியா நீங்க செஞ்சதா சரித்திரம் இல்லை. அது ஏன்?<br /><br />2) கடையில் போய் சரக்கு வாங்கீட்டு வரச் சொன்னா, அதெப்படி நாங்க முக்கியமா சொல்லிவிட்ட பிராண்டை மாத்தி வாங்கிட்டு வர்றீங்க?<br /><br />3) பக்கத்து டேபிள்காரர்களுக்கு சைடு டிஷ் தர்றது, சரக்கு மாஸ்டருக்கு சமையல் டிப்ஸ் தர்றதுன்னு எல்லாமே உடனே ஞாபகம் வெச்சுட்டு நடக்குது. ஆனா சிகரெட் வாங்கிட்டு வர்றது, பத்தவைக்க தீப்பெட்டி ஏற்பாடு பண்றது, சைடு ஆர்டர் பண்றது இதெல்லாம் நாலைஞ்சு தடவை சொல்லி, ரிமைண்டர் வெச்சு அப்புறம்தான் நடக்குது. அது ஏன்?<br /><br />4) ஃபுல் மப்புல தோணுற தத்துப்பித்துவங்களை ஏகப்பட்ட பேருக்கு என் செல்லுல இருந்து திரும்பத் திரும்பச் சொல்றீங்களே... அது ஏன்?<br /><br />5) நீங்க தண்ணியடிக்கிறது ஜாலிக்காகன்னு சொல்ல வேண்டியது, அதுவே நாங்க அடிச்சா அட்வைஸ் பண்றது. அதெப்படீங்க?<br /><br /><br />6) கடை அடைக்கப்போற கடைசி அவர்ல சரக்கு தேவைப்படும்போது உங்க மூஞ்சில இருக்கற டென்ஷன், கான்சண்ட்ரேஷன் – ஒம்போது மணிக்கே போலாம்னு நான் சொல்லும்போது ஏன் இருக்க மாட்டீங்குது?<br /><br />7) போனைப் போட்டுட்டு எதிர்முனையில கொலைவெறியோட திட்டும்போது செல்லுல மைக்கையும் போட்டுட்டு அதெப்படீங்க ஒரு ரியாக்ஷனும் காட்டாம முஞ்சிய வெச்சுக்கறீங்க?<br /><br />8) அடுத்தவன் தட்டுல இருந்து நான் ஆம்லேட்டை எடுத்துத் திங்கும்போது தலையில அடிச்சுக்கிற நீங்க, என் தட்டை வழிச்சு வழிச்சு நக்குறீங்களே... அது ஏன்ங்க?<br /><br />9) நான் சரியா வாட்டர் மிக்ஸ் பண்ணும்போதெல்லாம் கொஞ்சம் சரக்கை எச்சாவா ஊத்திக்கிற நீங்க, நான் டைட்டா இருக்கும்போது ராவா ஊத்தினாக்கூட அது ஏன் உங்களுக்கு அவ்ளோ பிடிக்குது?<br /><br /><br />10) பாருக்குக் கிளம்பும்போது ‘லேட்டாச்சு.. லேட்டாச்சு’ன்னு குதிக்கறீங்களே.. அதே மாதிரி மப்பு ஏறினதுக்கு அப்பறம் அதே அளவு ஸ்டெடியா உங்களால குதிக்க முடியுமா?ரமேஷ் வைத்யாhttp://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.com56tag:blogger.com,1999:blog-625624242298356997.post-91329564294934652522009-02-16T02:14:00.000-08:002009-02-16T02:38:41.223-08:00எல்லாம் தெரிந்தவன்!'நந்தினியிடம் இன்றைக்கே ஐ லவ் யூ சொல்லிவிடலாம்' என்று தீர்மானித்துக்கொண்டான் பரத். அவனைப் பற்றி முதன்முதலில் உள்ளூர்ப் பத்திரிகையில் எழுதியவள் நந்தினி. 'உலகின் அதிசய மனிதன்... எதைப்பற்றிக் கேட்டாலும் பதில் சொல்கிறார். உலகின் அதிக டேட்டாபேஸ் உள்ள கம்ப்யூட்டருக்கு இந்தியாவின் மனிதச் சவால்!' என்று எழுதியிருந்தாள். <br /><br />உண்மையில் பரத் அதற்கு முழுக்கத் தகுதியானவன். அது எப்படி என்று தெரியவில்லை, பதினைந்தாவது வயதில் 'அந்த'த் திறமை தனக்கு இருப்பதை உணர்ந்தான். யார் எதைக் கேட்டாலும் அதற்கான பதில் இவனுக்கு சந்தேகமில்லாமல் மூளையில் பளிச்சிட்டது. 'தாமிரத்தின் வேதிக்குறியீடு என்ன?' செக்கோஸ்லோவேகியாவில் எத்தனை மாகாணங்கள்? இடைக்காலச் சோழர்களில் தாவர விரும்பியான மன்னன் யார்? பதினொன்றின் வர்க்க மூலம் என்ன?சந்தன வாசனையோடு கூடிய கழிவை வெளியேற்றும் காட்டுப் பன்றி ஆப்பிரிக்காவின் எந்தப் பகுதியில் இருக்கிறது?செஸ்ஸில் கார்ப்போவ் இதுவரை தேசிய லெவலில் எத்தனை முறை வென்றிருக்கிறார்..?' <br /><br />எதைக் கேட்டாலும் டக் டக் என்று பதில் சொன்னான். 'பரத் ஆராய்ச்சிக்குரிய ஒரு மனிதப் பொக்கிஷம்' என்று ஆங்கிலப்ப் பத்திரிகை ஒன்று தலையங்கம் எழுதியது. சன் டிவியிலிருந்து ஸ்டார் டிவி வரை இவன் பேட்டியை ஆர்வமாய் ஒளிபரப்பின. ஞாபக சக்க்தியை அதிகரிக்கச் செய்யும் ஸிரப் தயாரிக்கும் மருந்து கம்பெனி இவனை விளம்பரத்தில் நடிக்க வைப்பதற்காக இவன் வீட்டுக்கு நடையாய் நடந்தது. அரசியல் கட்சிகள் இவனைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டு ஆதாயம் தேட அலைந்தன. <br /><br />இது மறுபிறவியா, வேறு ஏதாவதா என்று இவனே ஐந்து வருடங்களாகக் குழம்பிக்கொண்டிருக்க, தற்செயலாகச் சந்தித்த நந்தினி ஒரு பிரபல மனோதத்துவ நிபுணரிடம் இவனை அழைத்துச் சென்றாள். "இந்தத் திறமை எப்படி வந்ததுனு யோசிக்கிறதை மட்டும் நிறுத்திடுங்க. .மத்தபடி குழப்பம் எதுவும் இருக்காது..." என்று சொல்லிவிட்டார் டாக்டர். <br /><br />அப்போது இவனைப் பற்றிப் பத்திரிகையில் எழுதியதுடன், நேரம் கிடைக்கும்போதெல்லாம் இவனைச் சந்திக்க வந்துவிடுவாள் நந்தினி. மாலை ஐந்து மணிக்கு வந்தால், ராத்திரி பத்து மணிக்குத்தான் போவாள். இவனைப் பற்றிய செய்தியைப் படித்துவிட்டு கேள்விகள் கேட்க வருகிறவர்களை, ஓகே! நாளைக்கு வாங்க. மணி பத்தாச்சு" என்று விரட்டுவாள். <br /><br />'ரொம்ப நல்ல பொண்ணு' என்று இவன் நினைத்துக்கொண்டிருந்த போதே, ''ஹாய் டியர்..." என்றபடி நந்தினி நுழைந்தாள். <br />அவளுக்கு ஒரு பரிசு கொடுப்பவன் போன்ற தொனியில், "நந்தினி... நம்ம கல்யாணத்தை எப்ப வெச்சுக்கலாம்..?" என்றான் பரத்.<br /><br />அவ்வளவுதான் படபடவென்று பொரிந்துவிட்டாள் நந்தினி. அவள் பத்து நிமிடம் படபடத்ததன் சாராம்சம் இதுதான்.<br />"நான் உன்கூட ஃப்ரெண்ட்லியாகத்தான் பழகினேன். ஒரு பெண்ணின் மனசைப் புரிந்துகொள்ள முடியாத முட்டாள். வடிகட்டின முட்டாள்...ரமேஷ் வைத்யாhttp://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.com19tag:blogger.com,1999:blog-625624242298356997.post-28247366947556357662009-02-12T03:36:00.000-08:002009-02-12T05:09:11.738-08:00<span style="font-weight:bold;">ஸாரி <br />நண்பர்களே, <br />இந்தப் பதிவை <br />நீக்கிவிட்டேன்.</span>ரமேஷ் வைத்யாhttp://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.com35