Showing posts with label கொடுமை. Show all posts
Showing posts with label கொடுமை. Show all posts

Thursday, February 19, 2009

நண்பர்கள் நண்பர்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்

1) வண்டி ஓட்டணும் ஜாக்கிரதை, ரெண்டு பெக் அடிச்சதுக்கப்பறம் கொஞ்சம் கேப் விடுங்க ‍ – இப்படி நாங்க சொல்ற எந்த வேலையையும் உருப்படியா நீங்க செஞ்சதா சரித்திரம் இல்லை. அது ஏன்?

2) கடையில் போய் சரக்கு வாங்கீட்டு வரச் சொன்னா, அதெப்படி நாங்க முக்கியமா சொல்லிவிட்ட பிராண்டை மாத்தி வாங்கிட்டு வ‌ர்றீங்க?

3) பக்கத்து டேபிள்காரர்களுக்கு சைடு டிஷ் தர்றது, சரக்கு மாஸ்டருக்கு சமையல் டிப்ஸ் தர்றதுன்னு எல்லாமே உடனே ஞாபகம் வெச்சுட்டு நடக்குது. ஆனா சிகரெட் வாங்கிட்டு வர்றது, பத்தவைக்க தீப்பெட்டி ஏற்பாடு பண்றது, சைடு ஆர்டர் பண்றது இதெல்லாம் நாலைஞ்சு தடவை சொல்லி, ரிமைண்டர் வெச்சு அப்புறம்தான் நடக்குது. அது ஏன்?

4) ஃபுல் மப்புல தோணுற தத்துப்பித்துவங்களை ஏகப்பட்ட பேருக்கு என் செல்லுல இருந்து திரும்பத் திரும்பச் சொல்றீங்களே... அது ஏன்?

5) நீங்க தண்ணியடிக்கிறது ஜாலிக்காகன்னு சொல்ல வேண்டியது, அதுவே நாங்க அடிச்சா அட்வைஸ் பண்றது. அதெப்படீங்க?


6) கடை அடைக்கப்போற கடைசி அவர்ல சரக்கு தேவைப்படும்போது உங்க மூஞ்சில இருக்கற டென்ஷன், கான்சண்ட்ரேஷன் – ஒம்போது மணிக்கே போலாம்னு நான் சொல்லும்போது ஏன் இருக்க மாட்டீங்குது?

7) போனைப் போட்டுட்டு எதிர்முனையில கொலைவெறியோட திட்டும்போது செல்லுல மைக்கையும் போட்டுட்டு அதெப்படீங்க ஒரு ரியாக்‌ஷனும் காட்டாம முஞ்சிய வெச்சுக்கறீங்க?

8) அடுத்தவன் தட்டுல இருந்து நான் ஆம்லேட்டை எடுத்துத் திங்கும்போது தலையில அடிச்சுக்கிற நீங்க, என் தட்டை வழிச்சு வழிச்சு நக்குறீங்களே... அது ஏன்ங்க?

9) நான் சரியா வாட்டர் மிக்ஸ் பண்ணும்போதெல்லாம் கொஞ்சம் சரக்கை எச்சாவா ஊத்திக்கிற நீங்க, நான் டைட்டா இருக்கும்போது ராவா ஊத்தினாக்கூட அது ஏன் உங்களுக்கு அவ்ளோ பிடிக்குது?


10) பாருக்குக் கிளம்பும்போது ‘லேட்டாச்சு.. லேட்டாச்சு’ன்னு குதிக்கறீங்களே.. அதே மாதிரி மப்பு ஏறினதுக்கு அப்பறம் அதே அளவு ஸ்டெடியா உங்களால குதிக்க முடியுமா?

Monday, February 16, 2009

எல்லாம் தெரிந்தவன்!

'நந்தினியிடம் இன்றைக்கே ஐ லவ் யூ சொல்லிவிடலாம்' என்று தீர்மானித்துக்கொண்டான் பரத். அவனைப் பற்றி முதன்முதலில் உள்ளூர்ப் பத்திரிகையில் எழுதியவள் நந்தினி. 'உலகின் அதிசய மனிதன்... எதைப்பற்றிக் கேட்டாலும் பதில் சொல்கிறார். உலகின் அதிக டேட்டாபேஸ் உள்ள கம்ப்யூட்டருக்கு இந்தியாவின் மனிதச் சவால்!' என்று எழுதியிருந்தாள்.

உண்மையில் பரத் அதற்கு முழுக்கத் தகுதியானவன். அது எப்படி என்று தெரியவில்லை, பதினைந்தாவது வயதில் 'அந்த'த் திறமை தனக்கு இருப்பதை உணர்ந்தான். யார் எதைக் கேட்டாலும் அதற்கான பதில் இவனுக்கு சந்தேகமில்லாமல் மூளையில் பளிச்சிட்டது. 'தாமிரத்தின் வேதிக்குறியீடு என்ன?' செக்கோஸ்லோவேகியாவில் எத்தனை மாகாணங்கள்? இடைக்காலச் சோழர்களில் தாவர விரும்பியான மன்னன் யார்? பதினொன்றின் வர்க்க மூலம் என்ன?சந்தன வாசனையோடு கூடிய கழிவை வெளியேற்றும் காட்டுப் பன்றி ஆப்பிரிக்காவின் எந்தப் பகுதியில் இருக்கிறது?செஸ்ஸில் கார்ப்போவ் இதுவரை தேசிய லெவலில் எத்தனை முறை வென்றிருக்கிறார்..?'

எதைக் கேட்டாலும் டக் டக் என்று பதில் சொன்னான். 'பரத் ஆராய்ச்சிக்குரிய ஒரு மனிதப் பொக்கிஷம்' என்று ஆங்கிலப்ப் பத்திரிகை ஒன்று தலையங்கம் எழுதியது. சன் டிவியிலிருந்து ஸ்டார் டிவி வரை இவன் பேட்டியை ஆர்வமாய் ஒளிபரப்பின. ஞாபக சக்க்தியை அதிகரிக்கச் செய்யும் ஸிரப் தயாரிக்கும் மருந்து கம்பெனி இவனை விளம்பரத்தில் நடிக்க வைப்பதற்காக இவன் வீட்டுக்கு நடையாய் நடந்தது. அரசியல் கட்சிகள் இவனைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டு ஆதாயம் தேட அலைந்தன.

இது மறுபிறவியா, வேறு ஏதாவதா என்று இவனே ஐந்து வருடங்களாகக் குழம்பிக்கொண்டிருக்க, தற்செயலாகச் சந்தித்த நந்தினி ஒரு பிரபல மனோதத்துவ நிபுணரிடம் இவனை அழைத்துச் சென்றாள். "இந்தத் திறமை எப்படி வந்ததுனு யோசிக்கிறதை மட்டும் நிறுத்திடுங்க. .மத்தபடி குழப்பம் எதுவும் இருக்காது..." என்று சொல்லிவிட்டார் டாக்டர்.

அப்போது இவனைப் பற்றிப் பத்திரிகையில் எழுதியதுடன், நேரம் கிடைக்கும்போதெல்லாம் இவனைச் சந்திக்க வந்துவிடுவாள் நந்தினி. மாலை ஐந்து மணிக்கு வந்தால், ராத்திரி பத்து மணிக்குத்தான் போவாள். இவனைப் பற்றிய செய்தியைப் படித்துவிட்டு கேள்விகள் கேட்க வருகிறவர்களை, ஓகே! நாளைக்கு வாங்க. மணி பத்தாச்சு" என்று விரட்டுவாள்.

'ரொம்ப நல்ல பொண்ணு' என்று இவன் நினைத்துக்கொண்டிருந்த போதே, ''ஹாய் டியர்..." என்றபடி நந்தினி நுழைந்தாள்.
அவளுக்கு ஒரு பரிசு கொடுப்பவன் போன்ற தொனியில், "நந்தினி... நம்ம கல்யாணத்தை எப்ப வெச்சுக்கலாம்..?" என்றான் பரத்.

அவ்வளவுதான் படபடவென்று பொரிந்துவிட்டாள் நந்தினி. அவள் பத்து நிமிடம் படபடத்ததன் சாராம்சம் இதுதான்.
"நான் உன்கூட ஃப்ரெண்ட்லியாகத்தான் பழகினேன். ஒரு பெண்ணின் மனசைப் புரிந்துகொள்ள முடியாத முட்டாள். வடிகட்டின முட்டாள்...

Thursday, February 12, 2009

ஸாரி
நண்பர்களே,
இந்தப் பதிவை
நீக்கிவிட்டேன்.

Friday, February 6, 2009

அஞ்சுக்கு எத்தனை?

வளவளவென்று எழுதும் வழக்கமுள்ள நிருபரை ஆசிரியர் ஒருநாள் கன்னாபின்னா திட்டிவிட்டார். சில நாட்களில் ஒரு காரின் பெட்ரோல் டாங்க் வெடித்து ஐந்து பேர் இறந்து போய்விட்டார்கள். இந்தச் செய்தியை அந்த ரிப்போர்ட்டர் இப்படி ரிப்போர்ட் செய்தார்: 'ஐந்து பேர் பயணித்த காரின் பெட்ரோல் டேங்கில் பெட்ரோல் இருக்கிறதா என்று தீக்குச்சி கிழித்துப் பார்த்தார் ஒருவர். இருந்தது.'

கேள்வி பதில் பகுதிக்கு:
இதுவரை உங்களுக்கு 98 கெல்விகள் அனுப்பியிறுக்கிரேன். என்று கூட பிராசுறமாகவில்லையே என்?

எமதர்பாருக்கு மனிதன் ஒருவன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். எமன் வேறு ஏதோ கணக்கு வழக்குப் பார்த்துக்கொண்டிருந்ததால் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அங்கிருந்த உலகப்படத்தில் இந்தியாவில் டெல்லி பகுதியில் இரண்டு சிவப்பு விளக்குகள் எரிந்துகொண்டு இருந்தன‌. மனிதனின் திகைப்பைப் பார்த்த எமன், "யாராவது பொய் பேசினால் அந்த இடத்தில் சிவப்பு விளக்கு எரியும். இப்போது பிரதமரும் ஜனாதிபதியும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். " சற்று நேரத்தில் இந்தியா முழுக்க சிவப்பு விளக்கு எரிந்தது. பதறிப்போன மனிதனிடம் எமன் சொன்னான்: "இப்போது டெலிவிஷனில் நியூஸ் வாசிக்கிறார்கள்."

குற்றவாளி மரண தண்டனை அனுபவிக்க வேண்டிய இடத்தை அடைய முழங்கால் அளவு சேற்றைக் கடந்து போகுமாறு அமைத்திருந்தான் அரசன். அதைக் கடக்கும்போது, "சே, என்ன கொடுமை... என்னை நேரடியாத் தூக்கில் போட்டிருக்கலாமே..." என்றான் குற்றவாளி.
அதற்கு உடன் வந்த காவலன் சொன்னான், "உனக்காவது ஒரு தடவையோட போச்சு. நான் திரும்பி இதே பாதையில நடக்கணும்ங்கிறதை நினைச்சுப் பார்த்தியா?"

இன்டர்வியூ அதிகாரி: கஷ்டமான ஒரு கேள்வி கேட்கவா, ஈஸியான ரெண்டு கேள்வி கேட்கவா?
இன்டர்வியூவுக்கு வந்த நாதாரி: கஷ்டமான ஒரு கேள்வி.
இ.அ: கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா?
இ.வ.நா.:கோழி.
இ.அ.: எப்படிச் சொல்கிறாய்?
இ.வ.நா.: சார், ஒரு கேள்வி.....


அஞ்சுக்குள்ள ஒண்ணு போனா என்ன வரும்?
யாரவது பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்...