Showing posts with label சந்தக் கவிதை. Show all posts
Showing posts with label சந்தக் கவிதை. Show all posts

Wednesday, December 10, 2008

யப்பா போதுமப்பா..!


பிழிஞ்ச துணிபோல் ஊரே மழையால் ஊறிப்போச்சப்பா
நனைஞ்சு காய்ஞ்சு நனைஞ்சு காய்ஞ்சு நாறிப்போச்சப்பா
கிழிஞ்ச வானம் ஓட்டைவாளியாக் கீறிப்போச்சப்பா
எரிஞ்சு கெடந்த தரையில் வெள்ளம் ஏறிப்போச்சப்பா

காகிதம் மடிச்சுக் கப்பல் செஞ்ச பழக்கம் கெடலாமா
குடிசை பூராம் கப்பல் போல வெள்ளத்தில் விடலாமா
மாமூல் வாழ்க்கை மண்ணாக அடி மடியில தொடலாமா
மனுஷப் பய மேல் இரக்கமில்லாம கோபப்படலாமா

ஊருக முங்க ஊத்துன பெறகும் மேகம் தீரலையா
தாரு ரோடெல்லம் முழுங்கின பெறகும் தாகம் தீரலையா
வருணன், இந்திரன் மழைக்குச் சாமியாம் போதும் போங்கையா
வெயிலுக்குக் கடவுள் யாரோ எவரோ வெளியில வாங்கையா