Saturday, March 19, 2016

அகநாழிகை மாமா

அகநாழிகை மாமா

 அழகு மிகுந்த மாமா
அகநாழிகை மாமா
அறிவு நிறைந்த மாமா
அவரைப் பாடுவோமா..?

வக்கீல் கோட்டு மாட்டி
வாது மன்றம் செல்லுவார்
வார்த்தைகளை நீட்டி
வழக்குகளில் வெல்லுவார்

எத்தனையோ பாட்டிலே
ஏழு ஸ்வரம் காட்டுவார்
ஏரி காத்த ராமரை
இடத்தை விட்டு ஓட்டுவார்

ஏசுநாதர் என்றைக்கோ
எருசலேமைச் சுற்றினார்
வாசுதேவன் அப்பப்போ
வாய்த்த மலையில் சுற்றுவார்

பாங்காய்க் கவிதை எழுதுவார்
பதிப்பகமும் நடத்துவார்
போங்காய்ப் பேசும் மனிதரை
போட்டுப் பார்த்து மகிழுவார்

பாங்காக் சென்ற மாமா
என்ன செய்தார் தெரியுமா?
அதனை நானும் கூறினால்
அடிக்க ஓடி வருகுவீர்..! -

கொழந்தைக் கவிஞர் ரமேஷ் வைத்யா

No comments: