Friday, March 25, 2016

கபி கபி மேரே தில் மே


எப்போதும்என் மனதுள்ளே
ஓர்எண்ணமே தோன்றும்
 நீஇந்த உலகில்
வந்தாயோ என்னோடு சேர என
நீமுந்தைய பிறப்பில்
விண்மீனாய்மின் னியவளோ என்று
 உனைக் கொணர்ந்தார் மண்மேலே
என்னோடு வாழ்கவென
 எப்போதும்என் மனதுள்ளே
ஓர்எண்ணமே தோன்றும்
 உன் ஜோடி கை, உன் தோள்கள்
என்றும் என் ஆஸ்தி என
 உன் நீண்ட கூந்தல் நிழல் போக்கும்
எந்தன் வெய்யில் உன் ஈர இதழ், கரங்கள்
என் ஆஸ்தி என
 எப்போதும்என் மனதுள்ளே
ஓர்எண்ணமே தோன்றும்
 நான் போகும் சாலையில்
ஷெனாயின் பாடல் வந்தாற்போல்
 நம் சாந்தி ராத்திரி
பூந்துகில் தொடாமலா போவேன்
 உள்ளங்கைக்குள்ளே தான்
சுருங்காய் உன் வெட்கத்தாலே நீ
 எப்போதும்என் மனதுள்ளே
ஓர்எண்ணமே தோன்றும்
 உன் ஆயுளெல்லாம் இதைப் போலே
உன் அன்பு தாராய் நீ
 உன் நாட்கள் யாவும் இதே காதலின்
பார்வை வீசாய் முன் உன்னை அறியேன்
உனக்கும் அதேதானே
 எப்போதும்என் மனதுள்ளே
ஓர்எண்ணமே தோன்றும்

No comments: