Friday, March 25, 2016

சின்னாத்து மண்ணே என் பொன்னே

சின்னாத்து மண்ணே எம் பொன்னே
செருவாட்டுக் காசா என் ரோசா
செலவாகிப் போகாதே செல்லம்மா செல்லம்மா
செலவாகிப் போகாதே செல்லம்மா
1. மண்சரிஞ்சு பங்கப்பட்ட
பந்தக்காலு பள்ளத்திலும்
மஞ்சணத்திப் புல்துளிர்க்கும் மந்திரமாய்… (பத்திரமா
நேந்துவச்ச உண்டிக்காச
சாமியே திருடுமா
காவல்நிக்கும் எல்லச்சாமி
காலனா மருவுமா சொல்லம்மா… நீ சொல்லம்மா
செல்லம்மா ஏஞ் செல்லம்மா (ஏலேலம்மா/சின்னாத்து மண்ணே
2. பச்சைப்பல்லில் புன்சிரிக்கும்
பட்டுப்போலப் புல்வெளியும்
பச்சைப்பாம்பை வச்சிருக்கும் கண்மறைவா
கோடிஉசிர் செஞ்ச பாவி (சாமி)
கோடிக்கும் உறவுதான்
ஒண்ணிருக்கும் ஒண்ணுபோகும்
நேர்ப்படும் கணக்குதான்
துன்பமே இன்பம்தான்
செல்லம்மா ஏஞ்செல்லம்மா (ஏலேலம்மா
3. நேத்திருந்தோம் வீட்டுக்குள்ளே
காத்தடிச்ச வேகத்திலே
சாஞ்சிருச்சு கூரையெல்லாம் சங்கடமா
நீலவண்ணப் புள்ளிவானம்
 கூரையா ஜொலிக்குமே
மேகவெள்ளைப் பஞ்சுக் கூட்டம்
தோரணம் அசைக்குமே
இல்லைகள் இல்லையே
செல்லம்மா ஏஞ்செல்லம்மா
4. பொன்வண்டுக்கு வத்திப்பெட்டி
உள்ளுக்குள்ள மெத்தைகட்டி
வச்சிருந்தேன் பொத்திப்பொத்தி பத்திரமா
காலொசத்தி முட்டைபோடும்
காட்சிதான் கிடைக்குமா
நூலறுத்து தப்பியோடும்
சூழ்ச்சிதான் நடக்குமா
செல்லம்மா ஏஞ்செல்லம்மா
5. நள்ளிரவு விண்வெளியில்
நட்சத்திரப் பந்தலைப் போல்
பிள்ளையுந்தன் மென்சிரிப்பு (மென்னகைதான்)
கொல்லுவதோ (கொல்லுதடி)
காலையொளி பட்டதாலே
மீனெல்லாம் உதிர்ந்ததோ
வேளைவரும் அந்த ராவில்
 தோன்றவே மறைந்ததோ
 செல்லம்மா… செல்லம்மா

No comments: